. -->

Now Online

FLASH NEWS


Tuesday 3 December 2019

பள்ளிகளில் ''வாட்டர் பெல்'' திட்டம்: கூட்டாக நீர் அருந்தி மகிழ்ச்சி

அன்னுார் அடுத்த புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், வாட்டர் பெல் திட்டம் அமலுக்கு வந்தது.தமிழகத்தில், அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ, மாணவியர் ஒவ்வொரு பாட வேளை முடிந்தவுடன், தண்ணீர் அருந்துவதற்கு, 10 நிமிடம் இடைவேளை விட வேண்டும் என, பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியது.இதையடுத்து புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், மாணவ, மாணவிகள் போதிய அளவுக்கு தண்ணீர் அருந்துவதை உறுதி செய்யும் வகையில், வாட்டர் பெல் திட்டம் நேற்று அமலுக்கு வந்தது.இதன்படி, ஒரு நாளைக்கு மூன்று முறை வாட்டர் பெல் ஒலிக்கப்படும். அந்த நேரத்தில், மாணவ, மாணவிகள் தண்ணீர் குடிக்க அனுமதிக்கப்படுவர். நேற்று காலை இறை வணக்கத்துக்கு பின்னர் வரும் இடைவேளையில், 11:00 மணிக்கு ஒரு முறையும், மதியம் 12:30 மணிக்கும், மாலை 3:00 மணி இடைவேளையிலும், குழந்தைகள் ஓன்றாக வந்து ஒரிடத்தில் நின்று, ஆர்வத்துடன் தண்ணீர் அருந்தி மகிழ்ந்தனர்.இதை குழந்தைகள் தொடர்ந்து பின்பற்றுவார்கள் எனவும், தண்ணீர் அருந்துவதால் மாணவர்களின் உடல் ஆரோக்கியம் சிறப்பாகவும், மாணவர்கள் சுறுசுறுப்பாகவும் உள்ளனர் என்றும் பள்ளி தலைமை ஆசிரியர் முத்து தெரிவித்தார்.