. -->

Now Online

FLASH NEWS


Tuesday 3 December 2019

தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுதால் கனமழை எச்சரிக்கை!!

       
தென்கிழக்கு அரபிக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரித்துள்ளது. அரபிக்கடலில் லட்சத்தீவு பகுதிக்கும் கர்நாடகா கடல் பகுதிக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் ஏற்கெனவே மழை பாதிப்புகளால் சிரமப்படும் மக்கள் விரைந்து பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.