t> கல்விச்சுடர் வரும் 14-ஆம் தேதியும் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்க வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

12 January 2020

வரும் 14-ஆம் தேதியும் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்க வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை

வரும் 14-ஆம் தேதியும் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என்று அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் ஞாயிறன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

தமிழ்நாட்டில் 14-ஆம் தேதி போகிப்பண்டிகை வரை பள்ளிகள், கல்லூரிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவியர் பொங்கல் திருநாளைக் கொண்டாட சொந்த ஊருக்கு செல்வதில் சிக்கல் ஏற்படும்!

பொங்கல் திருநாள் கொண்டாட்டம் என்பது போகிப்பண்டிகையுடன் தொடங்குகிறது. எனவே போகியை கொண்டாடவும், விடுதி மாணவர்கள் பொங்கலுக்கு சொந்த ஊர் செல்ல வசதியாகவும் 14-ஆம் தேதியும் விடுமுறை வழங்க பள்ளிக் கல்வித்துறைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும்!

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

JOIN KALVICHUDAR CHANNEL