5 மற்றும் 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கேள்வித்தாள் எளிமையாக இருக்க வேண்டும் என்பதற்காக அந்தந்தப் பகுதிகளிலேயே தயாரித்து வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை அடுத்த நம்பியூரில் அமைய உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தை பார்வையிட்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைத் தெரிவித்தார்.
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஈரோடு மாவட்டத்தில் அ.தி.மு.க. 98 சதவிகித இடங்களை கைப்பற்றியுள்ளதாக அவர் கூறினார்.
┈┉┅━•• கல்விச்சுடர்••━┅┉┈