. -->

Now Online

FLASH NEWS


Sunday 12 January 2020

காலியிடங்களால் திணறும் கல்வித்துறை! நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை கமிஷனரிடம் கோரிக்கை!



பள்ளிக்கல்வித்துறை யில் , 26 உதவியாளர் , 150 கண்காணிப்பாளர் உட் பட முக்கிய பணியிடங் கள் நிரப்ப , நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற , கோரிக்கை வலுத்துள்ளது .

பள்ளிக்கல்வித்துறை நிர்வாக சீர்த்திருத்த நடவ டிக்கைகளுக்கு பின் , 120 மாவட்ட கல்வி அலுவல கங்களாக பிரிக்கப்பட்டுள் ளன . இதில் , 26 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு ( டி . இ . ஓ . , ) , உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன . புதிய கல்வி மாவட்டங் களில் போதிய பணியாளர் கள் இல்லாததால் , நிர்வாக பணிகள் மேற்கொள்வ தில் சிரமம் நீடிக்கிறது .

எனவே , 150 கண்காணிப் பாளர் பணியிடங்கள் உரு வாக்கி , விரைவில் நிரப்ப வேண்டுமென , பள்ளிக் கல்வித்துறை நிர்வாக அலு வலர்கள் சங்கம் சார்பில் , கமிஷனர் சிஜி தாமஸ் வைத்யனிடம் , சமீபத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது . பள்ளிக்கல்வி நிர்வாக அலுவலர் சங்க மாநில தலைவர் சீனிவாசன் கூறு கையில் , “ நிர்வாக பணி கள் தேக்கமின்றி நடக்கும் வகையில் , 62 புதிய கல்வி மாவட்டங்கள் உருவாக் கப்பட்டன .

இங்கு , முக்கிய பணியிடங்கள் காலி யாக உள்ளன . மேலும் , முதன்மை கல்வி அலுவலருக்கு , கற்பித்தல் சார்ந்த , ஆய்வுப்பணிகளுக்கு உத வும் பொருட்டு , இரு உத வியாளர்கள் உள்ளனர் . இவர்கள் , உயர்நிலை , மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களாக இருப்பதால் , நிர்வாக சிக் கல்களுக்கு , தீர்வு காண முடியாத நிலை நீடிக்கிறது . எனவே , இயக்குனர கத்தை போல , அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களிலும் , நிர் வாக அலுவலர் பணியி டம் உருவாக்கி , அமைச்சு பணியாளர்களை நியமித் தால் , அலுவலக பணிகள் தேக்கமின்றி நடக்கும் , ' ' என்றார் .