பயன்படுத்திய பாடப்புத்தகங்களை, சேகரித்து, பயன்படுத்துவது குறித்து, பசுமை தீர்ப்பாயம் விடுத்துள்ள உத்தரவு, நல்ல காரியம் தான், என, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.ஈரோடு மாவட்டம், கோபி அருகே குள்ளம்பாளையத்தில், அம்மா இளைஞர் விளையாட்டு திட்டத்தை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், நேற்று துவக்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில், 12 ஆயிரத்து, 524 பஞ்சாயத்துகள், 528 டவுன் பஞ்சாயத்துகளில், அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம் கொண்டு வரப்படும். இதன் மூலம் மாணவர்கள், கிரிக்கெட், கபடி, வாலிபால் போன்ற வைகளை விளையாட ஏதுவாக அமையும். ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு, மாணவர்கள் கட்டாயம் ஜாதிச்சான்றிதழ் வழங்க வேண்டுமென, எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. பயன்படுத்திய பாடப்புத்தகங்களை, தலைமை ஆசிரியர்கள் மூலம் சேகரித்து, பயன்படுத்துவது குறித்து, பசுமை தீர்ப்பாயம் விடுத்துள்ள உத்தரவு, நல்ல காரியம் தான். இம்முறையை தமிழகத்தில், எப்படி செயல்படுத்துவது என்பது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
FLASH NEWS
KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||