. -->

Now Online

FLASH NEWS


Tuesday 14 January 2020

பிரசவ தழும்புகளை எளிதில் நீக்க இதை செய்தால் போதும்.!

பொதுவாக குழந்தை பெற்ற பெண்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று தான் பிரசவகால தழும்புகள். இது பிரசவத்துக்குப் பிறகு சில பெண்களுக்கு தானாக மறைந்து விடும், சிலருக்கு அந்த தழும்பு நிரந்தரமாகவே காணப்படும்.

இதனால் பெண்கள் அவர்கள் விரும்பிய ஆடைகளை அணிய முடியாமல் அவதிப்படுகின்றனர். இந்நிலையில் இப்பிரச்சனையை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே பெண்கள் சரி செய்து கொள்ளலாம்.

கற்றாழையின் ஜெல்லை தழும்புகள் உள்ள இடத்தில் தடவினால் ஸ்ட்ரெட்ச் மார்க்கின் நிறம் மங்கி சருமம் அழகாகும்.

ஆப்ரிக்காட் பழத்தை வைத்து தழும்பு உள்ள இடத்தில் ஸ்கரப் செய்தால் அது அங்குள்ள சருமத் துளைகளை விரிவடையச் செய்து அதில் உள்ள இறந்த செல்கள் மற்றும் பாதிக்கப்பட்ட செல்களை கண்டுபிடித்து அதன் நிறத்தை மங்கச் செய்து பின்னர் படிப்படியாக தழும்புகள் குறைந்துவிடும்.

பிரசவத்திற்கு பின் ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் வராமல் தடுப்பதற்கு கொக்கோ பட்டர் சிறந்ததாக இருக்கும். அதனை கர்ப்பமாக இருக்கும்போதே தடவி மசாஜ் செய்து வந்தால் திசுக்கள் பாதிப்படையாமல் ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் வராமல் தடுக்கலாம்.


தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, ஸ்ட்ரெட்ச் மார்க் உள்ள இடத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்யவும். இதனால் விரைவில் சருமத்தில் உள்ள அசிங்கமான ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் மறைய ஆரம்பிக்கும். நல்ல பலனைப் பெற இந்த முறையை தினமும் குறைந்தது 2 தடவை செய்யுங்கள்.

தேங்காய் எண்ணெயுடன் ஆலிவ் ஆயில் : 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன் 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து வெதுவெதுப்பாக சூடேற்றி, பின் அதனை ஸ்ட்ரெட்ச் மார்க் உள்ள பகுதியில் தடவி வட்ட சுழற்சியில் மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரில் அலசுங்கள்.

தேங்காய் எண்ணெயுடன் கொக்கோ வெண்ணெய் : 1 டீஸ்பூன் கொக்கோ வெண்ணெயுடன், 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து, பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி குறைந்தது 10 நிமிடம் மசாஜ் செய்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இந்த பழங்கால சிகிச்சை முறையை வாரத்திற்கு குறைந்தது 3 முறை பின்பற்றி வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.


 
தேங்காய் எண்ணெயுடன் கற்றாழை ஜெல் : 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து, ஸ்ட்ரெட்ச் மார்க் உள்ள பகுதியில் தடவி மென்மையாக மசாஜ் செய்து, 1 மணிநேரம் நன்கு ஊற வைத்து, நீரில் நனைத்த துணியால் துடைக்க வேண்டும். இந்த முறையை தினமும் பின்பற்றினால், ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் மறைய ஆரம்பிப்பதைக் காணலாம்.

தேங்காய் எண்ணெயுடன் விளக்கெண்ணெய் : 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன் 1 டீஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து, ஸ்ட்ரெட்ச் மார்க் மீது தடவி மென்மையாக மசாஜ் செய்து, 20 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். தேங்காய் எண்ணெயுடன் காபி : 1 டீஸ்பூன் காபி தூளுடன் 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி 5-10 நிமிடம் மசாஜ் செய்து, பின் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 3-4 முறை பின்பற்றினால் நல்ல பலன் கிடைக்கும்.