. -->

Now Online

FLASH NEWS


Friday 14 February 2020

தமிழக பட்ஜெட் 2020-21: பள்ளி கல்வித்துறைக்கு ரூ.34,841 கோடி நிதி ஒதுக்கீடு


தமிழக அரசின் பட்ஜெட்டில்  பள்ளி கல்வித்துறைக்கு 34 ஆயிரத்து 841 கோடி ரூபாயும், சுகாதார துறைக்கு 15 ஆயிரத்து 863 கோடி ரூபாயும், வேளாண்துறைக்கு  11 ஆயிரத்து 894 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2020-2021ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட், சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தால் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் 2020-21ம் நிதியாண்டில் சுகாதாரத்துறைக்கு 15 ஆயிரத்து 863 கோடியும், மின்சாரத்துறைக்கு 20 ஆயிரத்து 115 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழ் வளர்ச்சித்துறைக்கு 74 கோடியே 8 லட்சம் ரூபாயும், போக்குவரத்து துறைக்கு 2 ஆயிரத்து 716 கோடியும், நெடுஞ்சாலைத்துறைக்கு 15 ஆயிரத்து 850 கோடியும், தமிழக காவல்துறைக்கு 8 ஆயிரத்து 876 கோடியும், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு 405.68 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகள் துறைக்கு 392.74 கோடி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறைக்கு 18 ஆயிரத்து 540 கோடி, நீதி நிர்வாகத்துறைக்கு ஆயிரத்து 403 கோடி, வேளாண்துறைக்கு 11 ஆயிரத்து 894 கோடி, கால்நடைத்துறைக்கு 199 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 5 ஆயிரத்து 306 கோடி, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 6 ஆயிரத்து 754 கோடி, தொழில்துறையை ஊக்குவிக்க 2500 கோடி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைக்கு 607.62 கோடி, தகவல் தொழில்நுட்பத் துறைக்கு 153 கோடி, இந்து சமய அறநிலையத்துறைக்கு 281.17 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
இதேபோல் மீன்வளத்துறைக்கு 1229 கோடி, நீர்ப்பாசனத்துறைக்கு 6 ஆயிரத்து 991 கோடி, கைத்தறி மற்றும் ஜவுளித்துறைக்கு 1224 கோடி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறைக்கு 218 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
மேலும், ஊரக வளர்ச்சித் துறைக்கு 23 ஆயிரத்து 161 கோடி, தொல்லியல் துறைக்கு 31 கோடியே 93 லட்சம், பள்ளிக் கல்வித்துறைக்கு 34 ஆயிரத்து 181 கோடி, உயர்கல்வித் துறைக்கு 5 ஆயிரத்து 52 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.