தேர்வை ரத்து செய்தால் மட்டும் போதாது
`5 ஆம் வகுப்பு, 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை இப்போது ரத்து செய்தால் மட்டும் போதாது, மத்திய அரசு நடைமுறைப்படுத்தவுள்ள தேசிய கல்விக் கொள்கையில் அது இடம்பெற்றால், அதைத் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த மாட்டோம் எனவும் தமிழக அரசு மத்திய அரசிடம் தெரிவிக்க வேண்டும்’ என்று விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் கருத்துத் தெரிவித்துள்ளார்.