. -->

Now Online

FLASH NEWS


Monday 10 February 2020

மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு அறிவிப்பு!

மத்திய அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் நிர்வாகத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணிகளில் சேர்வதற்கான 'மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு' நடைபெறும். இந்த தேர்வு இந்தாண்டு ஜூலை மாதம் 5-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த அறிவிப்பை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் வெளியிட்டுள்ளது.

இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.ctet.nic.in எனும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பிக்கால். தமிழகத்தில் இந்த தேர்வுக்காக சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி ஆகிய 4 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்வுக்கான அனுமதி அட்டையினை தேர்வுக்கு 10 நாட்களுக்கு முன்பாக www.ctet.nic.in எனும் இணையதளத்திலிருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம். விண்ணப்பக் கட்டணம் செலுத்தக் கடைசி நாள் 27-2-2020 ஆகும். மேலும் தேர்வு தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு https://ctet.nic.in/ எனும் இணையதளத்தை பார்வையிடலாம்.