. -->

Now Online

FLASH NEWS


Friday 7 February 2020

ஆங்கில ஆசிரியர்களுக்கு கற்பித்தல் மேம்பாடு பயிற்சி


 ஈரோடு மாவட்ட, அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு, ஆங்கிலம் கற்றல் மற்றும் கற்பித்தலை மேம்படுத்த, ஆங்கில பாட ஆசிரியர்களுக்கு பயிற்சி கூட்டம் நடந்தது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை உதவி திட்ட இயக்குனர் கலைச்செல்வி, பயிற்சிக்கு தலைமை வகித்தார். ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவியருக்கு, ஆங்கில பாடத்தில் உள்ள கற்றல் மற்றும் கற்பித்தல் குறைகளை கண்டறிந்து நிவர்த்தி செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. ஈரோடு, கோபி, பெருந்துறை, பவானி, சத்தி கல்வி மாவட்டங்களை சேர்ந்த அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆங்கில ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.