t> கல்விச்சுடர் வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு தொலைதூரங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்படும் -TRB - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

13 February 2020

வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு தொலைதூரங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்படும் -TRB

வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வில் முறைகேடுகள் நடைபெறுவதைத் தவிர்க்கும் வகையிலேயே வெளி மாவட்டங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கமளித்துள்ளது.
97 வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு நாளை முதல் 16ம் தேதி வரை 3 நாட்களுக்கு 57 மையங்களில் நடைபெற உள்ளது. 64 ஆயிரத்து 710 பேர் தேர்வெழுத உள்ள நிலையில், தேர்வர்களுக்கு தொலைதூரங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.


தேர்வுப் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கும் வெவ்வேறு இடங்களில் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் சலசலப்பு எழுந்த நிலையில், முறைகேடுகளை தவிர்க்கவும், வெளிப்படைத் தன்மையை கடைபிடிக்கவுமே வெளிமாவட்டங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கமளித்துள்ளது.

JOIN KALVICHUDAR CHANNEL