. -->

Now Online

FLASH NEWS


Friday 13 March 2020

பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் 10 லட்சம் மாணவர்களின் குழப்பம் தீர்ந்தது!

பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் 10 லட்சம் மாணவர்களின் குழப்பம் தீர்ந்தத
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை சுமார் 10 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர்.
இத்தேர்வு வரும் 27-ம் தேதி முதல் ஏப்ரல் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டுகளை பள்ளிகளில் டவுன்லோட் செய்யப்பட்டது.
அப்போது தேதி வாரியாக தேர்வுகள் வெளியிடப்படாமல் பாடம் வாரியாக தேர்வுகள் வெளியிடப்பட்டிருந்தது தெரியவந்தது.


கடைசியில் எழுத வேண்டிய கணிதத் தேர்வின் தேதி நடுவில் இடம்பெற்றிருந்தது.
இதனால் மாணவர்களும், ஆசிரியர்களும் பெரும் குழப்பத்துக்கு உள்ளாகினர்.

இது  இணை இயக்குநர் 
கவனத்திற்கு சென்றதன் பேரில், மாற்றியமைக்கப்பட்டு தேதி வாரியாக தேர்வுகள் இன்று வெளியிடப்பட்டு ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்து கொள்ளலாம் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதனால் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத இருந்த 10 லட்சம் மாணவர்களின் குழப்பம் தீர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ‌