. -->

Now Online

FLASH NEWS


Saturday 28 March 2020

கழுத்தில் உள்ள கருவளையத்தை போக்க சூப்பர் டிப்ஸ்!




நாம் நமது சருமம் மற்றும் உடலின் மற்ற பாகங்களை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புவதுண்டு. இதற்காக நாம் பல வழிகளில், அதிகமான பணத்தை செலவு செய்து, பல முயற்சிகளை மேற்கொள்கிறோம். 


ஆனால், நமக்கு சரியான தீர்வு கிடைப்பதில்லை. தற்போது இந்த பதிவில், இயற்கையான முறையில் நமது கழுத்தில் உள்ள கருவளையத்தை எவ்வாறு போக்கலாம் என்பது பற்றி பார்ப்போம்.


தேவையானவை:

கோதுமை மாவு
வெண்ணெய்

செய்முறை

சிறிதளவு கோதுமை மாவில், வெண்ணெய் கலந்து பேஸ்ட் போல செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அந்த பேஸ்ட்டாய் கழுத்தில் கருவளையம் உள்ள இடத்தை சுற்றிலும் போட வேண்டும். பின் 20 நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் கழுத்தில் உள்ள கருவளையம் படிப்படியாக குறைந்து விடும்.


சிறிதளவு ரோஸ்வாட்டர், கொஞ்சம் வெங்காயச்சாறு, ஆலிவ் எண்ணெய் இரண்டு  சொட்டு, இவற்றுடன் சிறிதளவு பயத்த மாவு கலந்து கழுத்தைச் சுற்றி பூசிவிடுங்கள். ஒரு பத்து நிமிடம் கழித்து கழுத்திலிருந்து தாடை  நோக்கி இலேசாக மசாஜ் செய்துவிடுங்கள். இவ்வாறு தொடர்ந்து செய்ய நாளடைவில் உங்கள் கழுத்தும் கருமை நிறம் நீங்கி பளபளக்கும்.
 
ஒரு ஸ்பூன் ஈஸ்ட்டுடன், முட்டைகோசின் இலையில் சாறு எடுத்து, ஒரு ஸ்பூன் தேன் கலந்து சருமம் எங்கும் பூசி வர சூரிய ஒளியால்  கருமை அடைந்த தோலின் நிறம் இயற்கை நிறத்திற்கு மாறிவிடும்.
 
கருவளையம் என்றாலே கண்ணுக்கு கீழ் உள்ள கருவளையத்தைத்தான் குறிக்கும். கருவளையம் நீங்க இதுதான் சிறந்த வழி.  வெள்ளரிக்காய்யை பொடி செய்து, அதில் தயிர் சேர்த்து பசைப்போல செய்து கருவளையும் உள்ள பகுதியில் தொடர்ந்து பூசி வர முப்பது  நாளில் கருவளையும் இருந்த இடம் காணாமல் போயிருக்கும்.
 
கருப்பு திட்டுகள் முகத்தில், மூக்கில், கண்ணங்கள் என அசிங்கமாக கருப்பு நிற திட்டுகள் காணப்படும். இதை கிராம புறத்தில் “மங்கு” என குறிப்பிடுவார்கள். இவற்றைப் போக்க, ஜாதிக்காய், சந்தனம், வேப்பங்கொழுந்து ஆகியவற்றை நீர் கலந்து நன்றாக அரைத்து கருப்பு திட்டுகள்  இருக்கும் இடத்தில் தடவுவதால் மறைந்துவிடும்.
 
வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து,  பாலில் குலைத்து, முகத்தில் பூசி 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் வேர்க்குரு வராமல், வெளியில் கருத்துப் போகாமல் இருக்கும்.