டெபிட்-கிரெடிட் கார்டில் பெரிய மாற்றம்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் அமல்..!!
டிஜிட்டல் பரிவர்த்தனை தொடர்பான மோசடிகளைத் தடை செய்ய ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் நாளை(மார்ச் 16) முதல் அமலுக்கு வருகிறது.
டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும் பாதுகாப்பானதாக மாற்றவும் இந்த புதிய விதிகள் உதவும்.
இது தொடர்பாக ரிசர்வ் வங்கி கடந்த ஜனவரி 15ம் தேதி ஒரு அறிவிப்பை வெளியிட்டது. இந்த விதிகள் அனைத்து டெபிட்-கிரெடிட் கார்டுகளுக்கும் பொருந்தும். இதில் கார்டுகளின் வசதிகளை மேம்படுத்தும் விதமாக transit access pass என்ற நடைமுறையை கார்டு நிறுவனங்கள் அறிமுகம் செய்துள்ளது இருப்பினும், இந்த புதிய விதிகள் ப்ரீபெய்ட் பரிசு அட்டைகள் மற்றும் மெட்ரோ அட்டைகளுக்கு பொருந்தாது.
மார்ச் 16ம் தேதி முதல் புதிய டெபிட் - கிரெடிட் கார்டுகளை வங்கிகள் வழங்கும்போது இந்தியாவில் உள்ள ஏடிஎம்கள் , ஸ்வைப் மெஷின்கள் மற்றும் பாயிண்ட் ஆஃப் சேல் ( பிஓஎஸ் ) டெர்மினல்களில் மட்டுமே பயன்படுத்தமுடியும். ஆன்லைனில் கூட பயன்படுத்த முடியாது.
இனி ஆன்லைனில் பணம் செலுத்த வேண்டும் என்றால் கூட அதற்கான சேவையை வங்கிகளிடம் இருந்து பெற வேண்டும்.
புதிய விதிப்படி, ஒருவர் தனது கிரெடிட் மற்றும் டெபிட் கார்டில் ஆன்லைன் மற்றும் வெளிநாடுகளில் பயன்படுத்தும் வசதி, பாஸ்வேர்ட் இல்லாமல் பணம் எடுத்துக்கொள்ள வேண்டுமா இல்லையா உள்ளிட்ட வசதிகளை வாடிக்கையாளர்களே முடிவு செய்து கொள்ளலாம்
ஸ்வைப் மெஷின் மேல் டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகள் வைத்தால், பாஸ்வேர்ட் இல்லாமல் ரூ.2000 வரை மூலம் பணம் எடுக்கலாம்.
இந்த நடைமுறைக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்ப்புகள் கிளம்பியதால் கடந்த ஜனவரி 15ம் தேதி முதல் டெபிட்-கிரெடிட் கார்டுகள் கார்டு பாதுகாப்பை உறுதி செய்யுமாறு ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்தது
மேலும் கிரெடிட்-டெபிட் கார்டு மூலம் ஏடிஎம்மில் எவ்வளவு பணம் எடுக்கலாம் மற்றும் வெளிநாடுகளில் எவ்வளவும் பணம் எடுக்கலாம் என்ற வரம்பையும் வாடிக்கையாளர்களே நிர்ணயம் செய்ய வங்கி அனுமதிக்க வேண்டும் என்று புதிய விதியில் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது
வாடிக்கையாளர்களே, வாடிக்கையாளர்கள் ஆன்லைன் பரிவர்த்தனைகள், தொடர்பு இல்லாத பரிவர்த்தனைகள் அல்லது சர்வதேச பரிவர்த்தனைகள் சேவைகள் அட்டையுடன் தானாகவே வந்தன, ஆனால் இப்போது அது வாடிக்கையாளரின் வேண்டுகோளின்படி தொடங்கும்
டெபிட்-கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்கள் தங்களது கார்டுடன் எந்தவொரு ஆன்லைன் பரிவர்த்தனை, தொடர்பு இல்லாத பரிவர்த்தனை அல்லது சர்வதேச பரிவர்த்தனை ஆகியவற்றை நீங்கள் இதுவரை செய்யவில்லை என்றால், கார்டில் உள்ள சேவைகள் மார்ச் 16 முதல் தானாகவே நிறுத்தப்படும்.
வாடிக்கையாளர் தனது அட்டையின் நிலையில் ஏதேனும் மாற்றங்களைச் செய்தால் அல்லது வேறு ஏதாவது செய்ய முயற்சி செய்தால், வங்கி வாடிக்கையாளரை எஸ்எம்எஸ் / மின்னஞ்சல் மூலம் எச்சரித்து தகவல்களை அனுப்பும்.
தற்போது பயன்பாட்டில் இருக்கும் டெபிட்-கிரெடிட் கார்டுகளுக்கு இந்த நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
FLASH NEWS
KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||