t> கல்விச்சுடர் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தடையின்றி போக்குவரத்து வசதி செய்துதரப்படும் - முதல்வர் அறிவிப்பு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

13 May 2020

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தடையின்றி போக்குவரத்து வசதி செய்துதரப்படும் - முதல்வர் அறிவிப்பு


பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பேருந்து வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளுக்கும் ஏற்பாடு செய்ய வேண்டுமென மாவட்ட ஆட்சியர்களை முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

ஜூன் 1  முதல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ளன, அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர்கள் கல்வித் துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடி போக்குவரத்து வசதியினை ஏற்படுத்தி தரவேண்டும்.

முன்னதாக
மாணவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் வகுப்பறைகளில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து தேர்வுக்கு வரவேண்டும். மாணவர்கள் எந்த பகுதியில் இருந்தாலும் அவர்களை அழைத்து வருவதற்கும், திரும்ப கொண்டு சென்று விடுவதற்கும் பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்படும் ஏற்கனவே கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.







JOIN KALVICHUDAR CHANNEL