தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 477 பேருக்கு கொரொனா உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 10,108இல் இருந்து 10,585ஆக உயர்ந்துள்ளது. கொரொனாவால் மேலும் 3 பேர் உயிரிழந்ததால் இறப்பு எண்ணிக்கை 74ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 3 பேர் உயிரிழப்பு; இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 74-ஆக அதிகரித்துள்ளது எனவும் கூறினார்
சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் இன்று மட்டும் 332 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,278 ஆக அதிகரித்துள்ளது.