t> கல்விச்சுடர் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 798 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

11 May 2020

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 798 பேருக்கு கொரோனா தொற்று உறுதி



தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 798  பேருக்கு ( 514 ஆண்கள், 284 பெண்கள்) கொரொனா உறுதியாகியுள்ளது மீண்டும் உச்சக்கட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் கொரொனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 7,204இல் இருந்து 8,002ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரொனாவால் இன்று 6 பேர் உயிரிழந்ததால் இறப்பு எண்ணிக்கை 53ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் இன்று மட்டும் 538 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,371 ஆக அதிகரித்துள்ளது.

JOIN KALVICHUDAR CHANNEL