. -->

Now Online

FLASH NEWS


Wednesday 13 May 2020

தமிழக முதல்வர் பழனிசாமி அதிரடி உத்தரவு!


விதிமுறைகளை மீறியதால் சீல் வைக்கப்பட்ட கடைகளை 3 நாட்களுக்கு பிறகு திறக்கலாம் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் அலுவலகங்கள் 50% ஊழியர்களுடன் செயல்படலாம். பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாத அலுவலகங்கள், கடைகள் ஆட்சியர்கள் மூலம் சோதனை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

*வீதி வீதியாக சென்று கொரோனா தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

*கொரோனா தொற்று குறித்து கோயம்பேடு வியாபாரிகளை எச்சரித்தோம். ஆனால் அவர்கள் ஏற்கவில்லை. 
*வெளிமாநிலத்தில் உள்ள தமிழர்களை மீட்கவும், வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்லவும் படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

*நஷ்டத்தை காரணம் காட்டி கோயம்பேடு சந்தையை இடமாற்றம் செய்ய வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்; அரசு சிறப்பாக செயல்படவில்லை என தவறான கருத்துகளை பரப்பி வருகின்றனர்

*பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தடையின்றி போக்குவரத்து வசதி செய்துதரப்படும் - முதல்வர் தெரிவித்துள்ளார்.