செப்டம்பர் 1 முதல் நவ.14 வரை படிப்படியாக பள்ளிகளை திறக்க அனுமதியளிப்பது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. செப்.1இல் இருந்து முதல் 15 நாட்களில் 10,11,12ம் வகுப்புகளை தொடங்கவும், செப்.15க்குப் பின் 6இல் இருந்து 9ம் வகுப்புகளை தொடங்கவும் திட்டமிட்டுள்ளது. பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஆகஸ்ட் இறுதியில் மத்திய அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பள்ளிகள் திறக்கும் பட்சத்தில் சில முக்கிய அறிவுறுத்தல்களை மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. அவை பின்வருமாறு..
செப்டம்பரில் இருந்து முதல் 15 நாட்களில் 10,11 மற்றும் 12-ம் வகுப்புகளை தொடங்க திட்டம்
பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிகளை ஆகஸ்ட் இறுதியில் மத்திய அரசு வெளியிடும்
வகுப்புகளை 2 ஷிப்டுகளில் நடத்தவும் பள்ளிகள் அறிவுறுத்தப்படும்
காலை 8 மணியில் இருந்து 11 மணி வரை ஒரு ஷிப்ட் மாலை 3 வரை 2-வது ஷிப்ட் என வகுப்புகள் நடைபெறும்