. -->

Now Online

FLASH NEWS


Thursday 24 September 2020

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை கவலைக்கிடம் - மருத்துவமனை அறிக்கை



பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படவே கடந்த மாதம் 5ம் தேதி சென்னையில் இருக்கும் எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சேர்ந்த கையோடு தான் நலமாக இருப்பதாக அவரே வீடியோ வெளியிட்டார்.

இந்நிலையில் கடந்த மாதம் 13ம் தேதி அவரின் நிலைமை மோசமாகவே தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். எஸ்.பி.பி.யின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. இதையடுத்து இசை ரசிகர்கள் அனைவரும் சேர்ந்து அவருக்காக பிரார்த்தனை செய்தார்கள்.
பிரார்த்தனையின் பலனாக அவரின் உடல்நலம் தேறியது. செயற்கை சுவாசத்தின் உதவியில்லாமல் இருந்தார், சாப்பிட்டார், விரைவில் வீடு திரும்புவார் என்று அவரின் மகன் சரண் தெரிவித்தார். இந்நிலையில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் சற்று முன் அறிவித்துள்ளது.

அந்த அறிவிப்பை பார்த்த இசை ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். பலருக்கும் கண்ணீர் வந்துவிட்டது. எஸ்.பி.பி. பற்றி சமூக வலைதளத்தில் பேசப்படுவதாவது,
கடவுளே, தயவு செய்து எஸ்.பி.பி.யின் உயிரை காப்பாற்று. அவர் நல்லபடியாக வீடு திரும்ப வேண்டும். தயவு செய்து எங்களுக்காக அவரை குணமடையச் செய். கவலைப்படாதீர்கள் சரண், நாங்கள் அனைவரும் உங்கள் அப்பாவுக்காக பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறோம். கூட்டு பிரார்த்தனைக்கு வலிமை அதிகம்.

அவர் நிச்சயம் மீண்டு வருவார் என்று தெரிவித்துள்ளனர்.