t> கல்விச்சுடர் ஜெ. மரணம் - சிபிஐ விசாரிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவு? - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

8 January 2017

ஜெ. மரணம் - சிபிஐ விசாரிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவு?

ஜெ. மரணம் -

சிபிஐ விசாரிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவு

ஜெயலலிதா மரணம் குறித்த புகார் மீது நடவடிக்கை எடுக்க சி.பி.ஐ-க்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து சி.பி.ஐ விசாரிக்க கோரி சசிகலா புஷ்பா எம்.பி. மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த புகார் மனுவை கடந்த டிசம்பர் மாதம் 19-ம் தேதி உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து சசிகலா புஷ்பா அளித்தார்.

இந்நிலையில் சசிகலா புஷ்பாவின் புகார் கடிதத்தை சி.பி.ஐ-க்கு உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது. மேலும் புகார் குறித்து நடவடிக்கை எடுக்குமாறும் சி.பி.ஐ-க்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

JOIN KALVICHUDAR CHANNEL