அரசு உயர்நிலை,மேல்நிலைப்
பள்ளிகளில் ஆசிரியர் இல்லாத உபரி பணியிடங்களை
திருப்பி ஒப்படைக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இலவச கட்டாய கல்வி
உரிமைச் சட்டப்படி மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்கள்
நிர்ணயிக்கப்படுகின்றன. அதன்படி 2016 ஆக., 1 ல் அரசு
உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயிக்கப்பட்டன. இதில் உபரி ஆசிரியர்களாக
கணக்கிடப்பட்டோர் வேறு பள்ளிகளுக்கு இடமாறுதல்
செய்யப்பட்டனர். ஆனால் ஆசிரியர் இல்லாத
உபரி பணியிடங்கள் அப்படியே இருந்தன.
தற்போது அந்த பணியிடங்களை
காலியிடங்களாக காட்டி ஆசிரியர்களை நியமிக்கக்கூடாது;
அப்பணியிடங்களை பள்ளிக் கல்வி இயக்குனரின்
பொதுத் தொகுப்பில் ஒப்படைக்க வேண்டும். அதனை பள்ளி அளவை
பதிவேட்டில் (ஸ்கேல் ரிஜிஸ்டர்) பதிவு
செய்ய வேண்டும் என, பள்ளிக் கல்வி
இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.