எம்.ஜிஆரின் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்ற சஸ்பென்ஸ் உடைந்துவிட்டது. இரு அணிகளுக்கும் இரட்டை இல்லை சின்னம் இல்லை என இந்திய தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவு காரணமாக அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்கே நகர் தொகுதியில் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் சசிகலா அணி, முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் அணி என்று இரு அணிகள் போட்டியிடுகின்றன. இந்நிலையில், அதிமுக சின்னமான இரட்டை இலையை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என இரு அணிகளும் தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு அளித்து இருந்தனர்.
இரு அணி தரப்பிலும் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி மற்றும் தேர்தல் கமிஷனர்கள் ஜோதி, ரவாக் ஆகிய 3 பேர் பெஞ்ச் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தனர். பல மணி நேர விசாரணைக்கு பிறகு இரட்டை இலை சின்னத்தை, எந்த அணிக்கும் அளிக்காமல் முடக்கிவிடுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி இரு அணிகளும் அதிமுக கட்சி என்ற பெயரை பயன்படுத்தக் கூடாது என்றும் இந்த இடைத்தேர்தலை பொருத்தவரையில் இரு அணி வேட்பாளர்களும் சுயேட்சை வேட்பாளர்களே என்றும் அதிரடியாக அறிவித்துள்ளது.
அதிமுகவின் இரு அணிகளுக்கும் இரட்டை இலை சின்னம் கிடையாது என்றும், அச்சின்னம் முடக்கப்படுவதாகவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது கூட கிட்டத்தட்ட அனைவரும் எதிர்பார்த்ததுதான். ஆனால் அதிமுக கட்சியின் பெயரையும் பயன்படுத்தக்கூடாது என்ற தேர்தல் ஆணையத்தின் உத்தரவை இரு அணிகளும் சிறிது கூட எதிர்பார்க்காததால் படுபயங்கர அதிர்ச்சி அடைந்துள்ளது. தேர்தல் ஆணையம் இலை குறித்த உத்தரவை வெளியிட்டவுடன் சட்ட வல்லுனர்களுடன் இரு அணி தரப்பினர்களும் ஆலோசித்து நீதிமன்றத்தில் ஸ்டே வாங்குவது குறித்து ஆலோசித்தன. ஆனால் சட்ட வல்லுனர்கள் இந்த உத்தரவுக்கு ஸ்டே வாங்க முடியாது என்று கையை விரித்துவிட்டார்களாம்
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதாலும், வேட்பு மனுத் தாக்கலும் முடியப் போகிற நிலையில் இருப்பதாலும் நீதிமன்றத்தை அணுக முடியாது என்றும், மேலும் 329வது சட்டப் பிரிவுப்படி தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு நீதிமன்றத்தில் ஸ்டே என்று கூறப்படும் இடைக்காலத் தடை பெற முடியாது என்றும் சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவித்தனர்.
அதுமட்டுமின்றி அப்படியே நீதிமன்றத்திற்கு சென்றாலும் தமிழகத்தில் உள்ள எந்தக் நீதிமன்றத்திற்கும் செல்ல முடியாது. சுப்ரீம் கோர்ட்டில் மட்டுமே முறையிட முடியும். ஆனால் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்து விட்டதால், சுப்ரீம் கோர்ட்டும் தலையிட வாய்ப்பு இல்லை. எனவே ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை பொருத்தவரை இரு அணி வேட்பாளர்களும் சுயேட்சைகள் தான். அதை மாற்ற முடியாது என்ற நிலைதான் இப்போதைக்கு உள்ளது.
மேலும் இதுகுறித்து தேர்தல் ஆணையம் கூறியுள்ள ஐந்து முக்கிய விஷயங்களை பார்ப்போம்
1. இரட்டை இலை சின்னம் யாருக்கும் கிடையாது.
அச்சின்னம் முடக்கப்படுகிறது.
2. ஒரு அணிகளும் அதிமுக என்ற கட்சியின் பெயரை பயன்படுத்தக் கூடாது.
3.
தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள 85 சின்னங்களில் ஏதாவது மூன்று சின்னங்களை இரண்டு அணிகளும் தங்களுக்கு தேர்வு செய்து கொள்ள வேண்டும். தேர்வு செய்த தகவலை இன்று காலை 10 மணிக்குள் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும்.
4.
அதிமுக என்ற பெயர் இல்லாத வேறு ஒரு பெயரை, இரு அணிகளும் தேர்வு செய்து அது குறித்த தகவலையும் காலை 10 மணிக்குள் தங்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
5.
இரு தரப்பும் தங்களுக்கு சாதகமான ஆவணங்களை வரும் ஏப்ரல் 17-ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்தால் மீண்டும் இரட்டை இலை சின்னம் குறித்து விசாரிக்கப்படும்
மேற்கண்ட ஐந்து விஷயங்கள் சசிகலா , ஓபிஎஸ் ஆகிய இரு பிரிவினர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது
KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||