இரவில் பிறந்தவர்களா நீங்கள்....? நீங்கள் இப்படித்தானாம் ........
நம்முடைய பிறப்பும் இறப்பும் யாராலும் நிர்ணயம் செய்ய முடியாது. அப்படி இருக்கும் போது சில பல சாஸ்திரங்கள் நாம் பிறந்த நேரத்தை வைத்து நம் குணநலன்கள் மட்டுமின்றி நம்முடைய வாழ்க்கை முறை எப்படி அமையும் என்பது வரை வரையறுத்து விடலாம். அதன்படி ஒரு சிலர் பகலிலும், பலர் இரவிலும் பிறந்திருப்பார்கள்.
அவ்வாறு இரவு நேரத்தில் பிறந்தவர்கள் எந்த விதமான மன நிலையை கொண்டுள்ளனர் என்பதை பார்க்கலாம் .
இரவில் சந்திரன் உதிக்கும் நேரத்தில் பிறந்தவர்கள் நல்ல சிந்தனை செய்பவர்களாகவும், கலை மற்றும் இசையில் நல்ல ரசனை மிக்கவர்களாகவும் இருப்பார்கள்.
தங்கள் தாய் மீது அதிக ஈடுபாடு கொண்டவராக இருப்பார்கள். மேலும் இவர்களிடம் ஏதேனும் ஒரு விஷயத்தைப் பற்றி கருத்து கேட்டால், அவர்கள் பல விஷயத்தைக் கண்காணித்து, அதை நிமிடத்தில் கூறிவிடுவார்கள்.
தன்னம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களை யாராலும் அடக்க முடியாது. மேலும் இவர்கள் பகலை விட, இரவில் நல்ல செயல்பாட்டுடன் இருப்பார்கள்.
இரவு நேரத்தில் பிறந்தவர்கள் எதிலும் அதிக உற்சாகம் மற்றும் விருப்பம் உள்ளவராக இருப்பார்கள். மேலும் இவர்களின் பிரம்மாண்டமான கற்பனை திறனால் நல்ல கற்பனை வளம் மிக்கவர்களாக திகழ்வர்கள்.
இரவில் பிறந்தவர்கள் நல்ல புத்தி கூர்மை மற்றும் சிறந்த விமர்சகராகவும் இருக்க விரும்புவர்கள். மேலும் இவர்கள் சமீபத்திய செய்திகள் மற்றும் தற்போதைய உலக நடப்புகள் அனைத்தையும் தெரிந்தவராக இருப்பார்கள்.
இதே போன்று பகலில் பிறந்தவர்கள் எந்த மனநிலையில் இருப்பார்கள் என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம் .