. -->

Now Online

FLASH NEWS


Monday 27 August 2018

CPSஐ ரத்து செய்ய கோரி நவம்பர் 15-இல் அரசு ஊழியர்கள் ஸ்டிரைக்!


பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும் என நவம்பர் 15-ஆம் தேதி அரசு ஊழியர்கள்


வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.


அரசு பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதியத்தை அரசு அமல்படுத்த வேண்டும்; 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்; அங்கன்வாடி, சத்துணவு, ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரந்தரப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 3 கட்ட போராட்டங்களில், பணியாளர் சங்கம் ஈடுபட உள்ளது.


அக்டோபர் மாதம் பிரசார இயக்கத்தையும் நவம்பர் 10-ஆம் தேதி திருச்சியில் வேலைநிறுத்த மாநாட்டையும் நவம்பர் 15-இல் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

Source: One India Tamil