இந்த விழாவில் கிராம இளைஞர்கள் ஒன்று சேர்ந்து திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளின் எண்ணிக்கையான 1330 திருக்குறள் போன்று மரக்கன்றுகளை தங்களது கிராமத்தில் மாணவர்களை கொண்டு நட முடிவு செய்தனர்.அதன்படி கிராமத்தில் காலியாக உள்ள ஏரி,குளக்கரை இடங்களை தேர்வு செய்தனர். நூறுநாள் தொழிலாளர்கள் மூலம் 1330 பள்ளங்களை தோண்டினர்.இதையடுத்து இளைஞர்கள் தங்களது சொந்த செலவில் வேம்பு, புங்கன், புளி, நெல்லி, பூவரசன் உள்ளிட்ட மரக்கன்றுகளை மாணவர்களை கொண்டு நேற்று நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இந்நிகழ்ச்சியில் செய்யாறு கல்வி மாவட்ட கல்வி அலுவலர் நடராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.