. -->

Now Online

FLASH NEWS


Friday 30 August 2019

மாணவர்களின் இலவச பயண அட்டையில் மோசடி செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: போக்குவரத்துத்துறை எச்சரிக்கை



மாணவர்களின் இலவச பயண அட்டையில் மோசடி செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை எச்சரித்துள்ளது. பல்வேறு இடங்களில் மாணவர்களின் பயண அட்டையை பயன்படுத்தி முறைகேடாக பொதுமக்கள் சிலர் பயணம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்களின் இலவச பயண அட்டையைப் பயன்படுத்தி பெரும்பாலான மோசடி செயல்கள் நடைபெறுகிறது. அரசு போக்குவரத்துக் கழக நடத்துனர்கள் இலவச பயண அட்டையைப் பயன்படுத்தி பயணம் செய்வோரை சோதனையிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. சோதனையில் பயண அட்டையை மோசடியாக பயன்படுத்துவோர் அகப்பட்டால் உடனடியாக போலீசில் ஒப்படைக்க போக்குவரத்துத்துறை ஆணை பிறப்பித்துள்ளது.