பள்ளிகளுக்கு ஒரு நாள் கூடுதல் விடுமுறை அளிக்கப்பட்டதுபோல், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கும் விடுமுறை என்று செய்திகள் வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவித்த உயர்கல்வித்துறை, தமிழகத்தில் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திட்டமிட்டப்படி ஜனவரி 2ஆம் தேதி திறக்கப்படும். கூடுதல் விடுமுறை கிடையாது என்று அறிவித்துள்ளது.
மேலும், ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள் ஜனவரி 2ஆம் தேதி முதல் நடைபெறும் எனவும் தகவல் தெரிவித்துள்ளது.