t> கல்விச்சுடர் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று முதல்கட்ட தேர்தல்! - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

27 December 2019

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று முதல்கட்ட தேர்தல்!


முதல்கட்ட உள்ளாட்சி தேர்தல் இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
 
தமிழகத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல்கட்ட தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியுள்ளது.

இதில் 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 260 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 2,546 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 4,700 கிராம ஊராட்சி தலைவர்கள், 37,830 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களின் பதவியிடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதற்காக 24,680 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. முதல்கட்ட தேர்தலில் ஒரு கோடியே 30 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். உள்ளாட்சி தேர்தலை நடத்த 702 தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 13,062 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு பணிக்காக 63,000 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். உள்ளாட்சி தேர்தலை ஒட்டி பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. அதன்படி, வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டர் தொலைவிற்குள் எந்தவொரு வேட்பாளரும் முகாம்களை அமைக்கக் கூடாது.


இந்த முகாம்களில் தேவையில்லாமல் கூட்டம் கூடக்கூடாது. முகாம்கள் அனைத்தும் சுவரொட்டிகள், கொடிகள், சின்னங்கள் இல்லாமல் எளிமையாக இருக்க வேண்டும். இங்கு உணவுப் பொருட்கள் எதுவும் விநியோகிக்க கூடாது.
வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் அல்லது லஞ்சம் கொடுக்கக் கூடாது. வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர் தொலைவிற்கு அப்பால் மட்டுமே வேட்பாளர்கள் ஆதரவு கோர முடியும்.
தேர்தல்: விதியை மீறிய நேரு... தொகுதியில் ஏற்பட்ட வாய் கலவர வீடியோ!
உரிய அனுமதி சீட்டு பெறாமல் வாக்குச்சாவடிக்குள் யாரும் நுழையக் கூடாது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டாம் கட்ட தேர்தல் வரும் 30ஆம் தேதி நடைபெறுகிறது.

JOIN KALVICHUDAR CHANNEL