ஊரக உள்ளாட்சித் தேர்தல் பணியில், விருப்பம் மற்றும் திறன் அடிப்படையில், மாற்றுத்திறனாளிகளை ஈடுபடுத்தலாம், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது.
மாற்றுத் திறனாளிகளை தேர்தல் பணியில் ஈடுபடுத்த வேண்டாம் என்ற பழைய உத்தரவில் திருத்தம் செய்து, அனைத்து மாவட்டத் தேர்தல் அதிகாரிகளுக்கும், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அனுப்பியிருக்கும் சுற்றறிக்கையில், இந்த தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
