ஓய்வு பெற்ற ஆசிரியை, சங்கிலி பறிக்க முயன்ற இருவரிடம் போராடி, கூச்சலிட்டதால், மக்கள் வரவே, அவர்கள் மொபட்டில் தப்பினர். சேலம், சூரமங்கலம் அருகே, நரசோதிப்பட்டியைச் சேர்ந்தவர் ஷியாமளாதேவி, 60; ஓய்வு பெற்ற ஆசிரியையான இவர், நேற்று முன்தினம் இரவு, 8:30 மணிக்கு, வீடு அருகே, சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, ஹெல்மெட் அணிந்து, மொபட்டில் வந்த இருவர், ஷியாமளா அணிந்திருந்த, எட்டு பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர். சுதாரித்த ஷியாமளாதேவி, சங்கிலியை கெட்டியாக பிடித்துக்கொண்டு கூச்சலிட்டார். உடனே, மக்கள் ஓடிவர, அந்த இருவரும் தப்பி விட்டனர். இதுகுறித்து, ஷியாமளாதேவி புகாரளிக்காத நிலையில், சங்கிலி பறிப்புக்கு முயன்ற இருவர் குறித்து, சூரமங்கலம் போலீசார், அப்பகுதியிலுள்ள, சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை, ஆய்வு செய்து வருகின்றனர்.
| KALVICHUDAR TABLE | ||||||||||||
| 1-5th | 6-9th | 10th | 12th | |||||||||