t> கல்விச்சுடர் கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

13 October 2025

2026 ஆம் ஆண்டு மூன்று சிறப்பு தகுதி தேர்வு நடத்த அரசு திட்டம். சிறப்பு தகுதித் தேர்வுக்கு SCERT மூலம் பயிற்சி வழங்க பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் உத்தரவு!

சிறப்பு தகுதித் தேர்வுக்கு SCERT மூலம் பயிற்சி வழங்க பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் உத்தரவு!


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.10.2025




திருக்குறள்:

குறள் 782:

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு       

விளக்க உரை: 

அறிவுடையவரின் நட்பு பிறை நிறைந்து வருதல் போன்ற தன்மையுடையது, அறிவில்லாதவரின் நட்பு முழுமதி தேய்ந்து பின் செல்லுதல் போன்ற தன்மையுடையன.

பழமொழி :
Teamwork makes the dream work.    

10 October 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.10.2025




திருக்குறள்: 

குறள் 781: 

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் 
வினைக்கரிய யாவுள காப்பு. 

விளக்க உரை: 

நட்பைப்போல் செய்து கொள்வதற்கு அருமையானவை எவை உள்ளன, அதுபோல் தொழிலுக்கு அரிய காவலாக இருப்பவை எவை உள்ளன.

பழமொழி :
One good deed teaches more than a hundred words. 

ஒரு நல்ல செயல் நூறு வார்த்தைகளை விட அதிகம் கற்பிக்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1.மின்சாரம் போன்ற எரி பொருட்கள் வீணாக்காமல் சிக்கனமாக உபயோகிப்பேன்.

2.சூரிய சக்தியை பயன்படுத்த முயற்சிப்பேன்.

பொன்மொழி :

பயத்தை வெல்ல விரும்பினால், வீட்டில் உட்கார்ந்து கொண்டு அதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தால் மட்டும் போதாது.வெளியில் வந்து செயலில் இறங்க வேண்டும்- டேல் கார்னகி

பொது அறிவு : 

01.உலகின் மிகப்பெரிய விதை எது?


இரட்டைத் தேங்காய் double coconut எனப்படும் "கோகோ-டி-மெர்
(Coco de Mer)

02.ஒளியின் செல்லும் வேகத்தை முதன்முதலில் கண்டுப்பிடித்த
விஞ்ஞானி யார்?


ஓலே ரோமர் (Ole Rømer) 
English words :

Kind - friendly and helpful.


Music - organised sound.

தமிழ் இலக்கணம் :

 இரண்டு பெயர்ச்
சொற்களுக்கிடையில் ஒற்று பெரும்பாலும் தோன்றும்
எ. கா. தண்ணீர்க் குடம். பள்ளிக் கூடம். இந்த எடுத்துக்காட்டுகளைக் கவனியுங்கள். தண்ணீர், குடம் - இரண்டும் பெயர்ச்சொற்கள். 
பள்ளி, கூடம் - இரண்டும் பெயர்ச்சொற்கள். 
இவை தொடராய் ஆகும்பொழுது இரண்டாம் சொல் எந்த வல்லின மெய்யில் தொடங்குகிறதோ அந்த ஒற்றெழுத்து மிகுந்தது. கூடுதலாய்த் தோன்றியது.
அறிவியல் களஞ்சியம் :

 உணவைச் சேகரித்து வைப்பது எறும்பின் வேலைகளில் மிக முக்கியமானது. ஆனால் இப்படி சேகரித்துவைக்கும் உணவு, மழைக்காலத்தில் பூசனம் பூத்து கெட்டுப்போய் விடாமல் இருக்க அவை ஒரு வேதிப்பொருளை பயன்படுத்துகின்றன. அந்த வேதிப்பொருளும், அதன் இயல்பும் தற்போது கண்டறியப்பட்டு மருந்து தயாரிப்பில், அது பயன்படுத்தப்படுகிறது.

அக்டோபர் 10

உலக மனநல நாள்

உலக மனநல நாள் (World Mental Health Day) ஆண்டுதோறும் அக்டோபர் 10 அன்று உலகளாவிய மனநலக் கல்வி, விழிப்புணர்வு மற்றும் சமூக மனப்பான்மைக்கு எதிராக வாதிடும் நாளாக கடைப்பிடிக்கப்படுகின்றது. இந்நாள் முதன் முதலாக 1992 ஆம் ஆண்டில் உலக மனநல மையத்தின் முன்னெடுப்பில் கொண்டாடப்பட்டது. இவ்வமைப்பில் 150 இற்கும் மேற்பட்ட நாடுகள் உறுப்புரிமை வகிக்கின்றன. ஆத்திரேலியா போன்ற சில நாடுகளில் இந்நாள் மனநல வாரமாக ஒரு கிழமைக்கு கொண்டாடப்படுகிறது.
நீதிக்கதை

 அழகிய ரோஜா செடி



அது ஒரு வசந்த காலம். பூங்காவில் எண்ணற்ற மரம் செடி கொடிகள் இருந்தன. அதில் ஒரு ரோஜாச் செடியும், கள்ளிச்செடியும், சவுக்கு மரமும் அருகருகே இருந்தன. வசந்த கால காலை நேரம். அந்த ரோஜாச்செடி அழகாகப் பூத்திருந்தது. அதைக் கடந்து சென்ற அனைவரும் ஒரு நொடி நின்று பார்த்து சென்றனர். அந்தச் சவுக்கு மரம் ரோஜாச் செடியிடம் நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய். பூங்காவிற்கு வரும் அனைவரும் உன்னைப் பார்த்து மகிழ்ந்து செல்கின்றனர் என்றது. ரோஜாச் செடி வெட்கத்தில் நாணி அதன் இதழ்கள் மேலும் சிவந்தன. கர்வமும் தலைக்கு ஏற தொடங்கியது.



அருகே இருந்த கள்ளிச்செடியை பார்த்து இவ்வளவு கோரமான தோற்றத்தைக் கொண்ட நீ என்னருகே இருப்பது எனக்கு அவமானமாக உள்ளது என்று கூறி தள்ளிப்போக முயன்றது. ஆனால் ரோஜா செடியால் தள்ளிப்போக முடியவில்லை. இவ்வாறு தினசரி அந்த கள்ளிச்செடியை குறை கூறிக்கொண்டே இருந்தது ரோஜா செடி. ஆனால் இதற்கு அந்த கள்ளிச்செடி எந்த முக சுளிப்பும் கோவமும் படாமல் இருந்தது.

நாட்கள் ஓடின. கோடைக்காலம் சுட்டெரிக்க தொடங்கியது. கோடைக்காலத்தில் வெட்பத்தினால் பூங்காவில் பார்வையாளர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. தண்ணீர் பற்றாக்குறையும் வந்தது. பூங்கா நிறுவனத்தினரால் ஒழுங்காகத் தண்ணீர் ஊற்றிப் பராமரிக்க முடியவில்லை. ரோஜா செடியும் வாட தொடங்கியது. ஆனால் கள்ளிச்செடி எப்போதும் போல இருந்தது. குருவிகள் பல வந்து கள்ளிச்செடி மீது அமர்ந்து அதைக் கொற்றி நீர் குடித்தன. இதைக்கண்ட ரோஜா செடி சவுக்கு மரத்திடம் குருவிகள் கொற்றுவதால் கள்ளிச்செடிக்கு வலிக்காதா? என்று கேட்டது. 

சவுக்கு மரமோ கள்ளிச்செடிக்கு வலிக்கத் தான் செய்யும் இருந்தாலும் அதைத் தாங்கி கொண்டு தாகத்தில் தவிக்கும் குருவிகளுக்கு தண்ணீர் கொடுப்பது தனக்குக் கிடைத்த வரமாகக் கருதுகிறது. நீயும் கேட்டுப்பார். கள்ளிச்செடி சம்மதித்தால் குருவிகளின் உதவியினால் உனக்குத் தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ளது என்று கூறியது. கேட்க முகமில்லாமல் ஆனால் உயிர் வாழ நீர் இல்லாததால் அந்த ரோஜா செடி. கள்ளிச்செடியிடம் நீர் கேட்டது. கள்ளிச்செடியும் குருவியின் உதவியால் ரோஜா செடிக்கு நீர் கொடுத்து உதவியது. தோற்றத்தை வைத்து யாரையும் மதிப்பிடக்கூடாது என ரோஜா செடி புரிந்துகொண்டது.
இன்றைய செய்திகள்

10.10.2025

⭐இலங்கை சிறையில் இருந்து மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- முதலமைச்சர் வலியுறுத்தல்

⭐ குடியிருப்புகள், தெருக்கள், சாலைகளில் உள்ள ஜாதிப் பெயர்களை நீக்கும் பணிகளை நவம்பர் 11-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

⭐ குழந்தைகளின் மனநலனைக் காக்கும் விதமாக, 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த டென்மார்க் அரசு தடை விதித்துள்ளது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀மதுரையில் கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்தார் தோனி.
ரூ.325 கோடி செலவில் இந்த ஸ்டேடியம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த மைதானத்தில் டி.என்.பி.எல்., ஐ.பி.எல்., ரஞ்சி கிரிக்கெட் போன்ற போட்டிகள் நடக்க வாய்ப்புள்ளது.

Today's Headlines

⭐The Chief Minister has urged that steps have to be taken to rescue fishermen from Sri Lankan prisons.

⭐ The Tamil Nadu government has issued an order stating that the removal of caste names from residential areas, streets, and roads is to be completed by November 11th.

⭐ To protect children's mental health, the Danish government has banned children under the age of 15 from using social media.

 SPORTS NEWS 

🏀Dhoni inaugurated the cricket stadium in Madurai, which was built at a cost of Rs. 325 crores and is likely to host matches like TNPL, IPL, and Ranji cricket.


9 October 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.10.2025




திருக்குறள்:

குறள் 722: 

கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் 
கற்ற செலச்சொல்லு வார் 

விளக்க உரை: 

கற்றவரின் முன் தாம் கற்றவைகளைச் அவருடைய மனதில் பதியுமாறுச் சொல்லவல்லவர், கற்றவர் எல்லாரிலும் கற்றவராக மதித்துச் சொல்லப்படுவார்.

பழமொழி :
Hardwork turns dreams into reality. 

கடின உழைப்பை கனவுகளை நனவாக்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1.மின்சாரம் போன்ற எரி பொருட்கள் வீணாக்காமல் சிக்கனமாக உபயோகிப்பேன்.

2.சூரிய சக்தியை பயன்படுத்த முயற்சிப்பேன்.

பொன்மொழி :

நீ கடவுளின் குழந்தை என்பதால் உனக்கு என்ன நடந்தாலும் அதைவிட நீ உயர்ந்தவன் சிறந்தவன் என்ற மன உறுதி வேண்டும் - டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம்

பொது அறிவு : 

01.மிகக் குறுகிய காலம் அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்தவர் யார்?


வில்லியம் ஹென்றி ஹாரிசன்
(William Henry Harrison)

02. எரிமலைகள் அதிகம் உள்ள நாடு எது?

அமெரிக்கா ஐக்கிய நாடுகள்
(United States of America)
English words :

tear up – rip into pieces,ஒரு பொருளை சிறிய துண்டுகளாகக் கிழிப்பது

தமிழ் இலக்கணம் :

 சில சுட்டு, வினாச் சொற்கள்:
'அ', 'இ', 'எ' போன்ற சுட்டு, வினா எழுத்துக்களின் முன்னரும், அவற்றின் அடியாகத் தோன்றிய அந்த, இந்த, எந்த போன்ற சொற்களின் முன்னரும் வல்லினம் மிகுந்து வரும். 
எ.கா: இந்த + பள்ளி = இந்தப்பள்ளி 
எந்த+காடு = எந்தக்காடு
அந்த+செடி= அந்தச்செடி

அறிவியல் களஞ்சியம் :

 எறும்புகள் ராணுவ வீரர்களைப் போல எப்போதும் சாரிசாரியாக ஊர்ந்து செல்வதன் மூல ரகசியம் ஃபெரமோன் என்ற வேதிப்பொருள்தான். அந்தக் கோட்டை தவறவிட்டால், வழி தெரியாமல் போய்விடும்.எறும்புகள் போடும் இந்த ஃபெரமோன் பாதை எப்போதும் வளைந்து வளைந்துதான் இருக்கும். இடையே சில இடங்களில் நீர் சொட்டிக்கொண்டிருப்பது போன்ற சிறுசிறு ஆபத்துகள் இருந்தாலும் கூட, உணவு கிடைத்துவிட்டால் எறும்புக் கூட்டம் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாது.இதை நீங்கள் நேரில் பார்க்கும்போது கவனித்திருக்கலாம்.

அக்டோபர் 09

சே குவேரா அவர்களின் நினைவுநாள்

சே குவேரா (Che Guevara) என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna) (14 சூன் 1928 – 9 அக்டோபர் 1967) அர்ஜென்டீனாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்குபெற்ற போராளி எனப்பல முகங்களைக் கொண்டவர்.



உலக அஞ்சல் தினம்

உலக அஞ்சல் தினம் (World Post Day) அக்டோபர் 9 இல் சர்வதேச ரீதியில் நினைவு கொள்ளப்படுகிறது. அக்டோபர் 9, 1874இல் சுவிட்சர்லாந்திலுள்ள பேர்ன் நகரில் சர்வதேச அஞ்சல் ஒன்றியம் நிறுவப்பட்ட தினமே சர்வதேச அஞ்சல் தினமாகக் கொள்ளப்படுகிறது. மொத்தம் 150 மேற்பட்ட நாடுகளில் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 1969 ஆம் ஆண்டு ஜப்பான் டோக்கியோவில் நடந்த அனைத்துலக அஞ்சல் ஒன்றிய கூட்டத்தில் இந்த தினம் குறித்து முடிவெடுத்து கடைபிடிக்கப்படுகிறது.

நீதிக்கதை

 செய்யும் தொழிலே தெய்வம் .

                  ஒரு பெரிய நகரத்தில் இருந்த பெரிய கம்பெனி முன்பிருந்த கடையில் ஒரு பெரியவர் சமோசா விற்றுக் கொண்டிருந்தார். அந்த வட்டாரத்தில் அவரின் கடை மிகப் பிரபலம். ஒரு நாள் அந்த கம்பெனி மேனேஜர் கடைக்கு வந்து சாப்பிட்டுக் கொண்டே, நீங்க நல்லா நிர்வாகம் பண்றீங்க. தொழிலை நல்லா வளர்த்திருக்கீங்க, இதுவே என்னைப் போல பெரிய கம்பெனியில் நீங்க வேலையில் இருந்திருந்தால் நீங்களும் என்னைப்போல பெரிய அளவு முன்னேறியிருக்கலாம் என்றார் கிண்டலாக .

                   பெரியவர் புன்னகைத்துவிட்டு, இல்லை ஐயா . நான் உங்களை விட நன்றாகவே முன்னேறியிருக்கிறேன். பத்து வருஷத்துக்கு முன் நான் இந்த கூடையில் சமோசா விற்றபோது நீங்கள் இந்த கம்பெனியில் வேலைக்கு சேர்ந்திருந்தீங்க. அப்பொழுது என் வருமானம் மாதம் இரண்டாயிரம் ரூபாய். உங்கள் வருமானம் மாதம் இருபதாயிரம்.

                    நீங்கள் இப்பொழுது இந்த கம்பெனியில் மேனேஜர் ஆகி விட்டீர்கள். மாதம் இரண்டு லட்சம் சம்பளம் வாங்குகிறீர்கள். இப்பொழுது எனக்கு சொந்தமாக இந்த கடை இருக்கிறது. எனக்கு நல்ல பேர் இருக்கு. நாளை என் வாரிசுகளுக்கு இந்த தொழிலை நான் தர முடியும். அவர்கள் என்னைப்போல இல்லாமல் நேரடியாக முதலாளியாக வந்து கடையை முன்னேற்றத்திற்கு கொண்டு வந்தால் போதும் . 

                    ஆனால் உங்களுக்கு அப்படியில்லை. உங்கள் பதவியை உங்கள் மகனுக்கு அப்படியே தர முடியாது. உங்களின் இத்தனை வருட உழைப்பின் பலன் உங்கள் முதலாளியின் மகனுக்குத்தான் போகும். உங்கள் மகன் மீண்டும் பூஜ்ஜியத்தில் இருந்து துவங்க வேண்டும். நீங்கள் அனுபவித்த அவ்வளவு கஷ்டத்தையும் அவனும் அனுபவிப்பான். உங்கள் மகன் உங்களைப் போல மேனேஜர் ஆகும்போது, என் மகன் எந்த நிலையில் இருப்பான் என்று நீங்களே எண்ணிப் பாருங்க என்றார். ஒருவேளை என் மகனிடம் வேலைக்கு வந்தாலும் வரலாம் என்றார். 

                    மேனேஜர் சமோசாவுக்கு பணத்தைக் கொடுத்துவிட்டு மௌனமாகச் சென்று விட்டார். 



நீதி : செய்யும் தொழிலைக் கொண்டு யாரையும் குறைவாக மதிப்பிடக் கூடாது.

இன்றைய செய்திகள்

09.10.2025

⭐விதிகளை பின்பற்ற தவறிய 54 அரசு & தனியார் பல்கலை க்கழகங்களுக்கு 
பல்கலைக்கழக மானியக் குழு (UGC) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

⭐அனைத்து மாவட்டங்களிலும் 5ஜி மொபைல் இணைப்பு - பிரதமர் மோடி பெருமிதம்

⭐சொந்த நாட்டு மக்கள் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்திய மியான்மர் ராணுவம்-40 பேர் உயிரிழப்பு

⭐2025ம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு   
ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்காவை சேர்ந்த 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀முன்னேற்றம் கண்ட இந்திய வீரர்கள் . பேட்டிங் தரவரிசையை பொறுத்தவரை ஜடேஜா 6 இடங்கள் முன்னேறி 25-வது இடத்தை பிடித்துள்ளார்.

Today's Headlines

⭐ To 54 Government & Private Universities that do not follow the protocol 
The University Grants Committee (UGC) has issued a notice.

⭐ 5G Mobile Link in all districts - Prime Minister Modi is proud.

⭐ The Myanmar Army bombarded its own country's people. 40 people were killed. 

⭐ The 2025 Nobel Prize for Chemistry is distributed to
3 people from Japan, Australia, and the United States.

🏀 Sports News

 Improvement in the ranking of the Indian players. As for the batting rankings, Jadeja has jumped 6 places from 31st place and got the 25th place.


8 October 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.10.2025



திருக்குறள்:

குறள் 701:

கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக் கணி        

விளக்க உரை: 

ஓருவர் சொல்லாமலே அவருடைய முகத்தை நோக்கி அவர் கருதிய குறிப்பை அறிகின்றவன் எப்போதும் உலகத்திற்கு ஓர் அணிகலன் ஆவான்.

பழமொழி :
Knowledge is wealth no thief can steal.

7 October 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.10.2025





திருக்குறள்:

குறள் 682:

அன்பறி வாராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்
கின்றி யமையாத மூன்று 

6 October 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 06.10.2025





திருக்குறள்: 

குறள் 681: அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு விளக்க உரை: அன்புடையவனாதல், தகுதியானக் குடிப்பிறப்பு உடையவனாதல் அரசர் விரும்பும் சிறந்த பண்பு உடையவனாதல், ஆகிய இவை தூது உரைப்பவனுடையத் தகுதிகள்.

பழமொழி :
Success tastes sweeter after struggle.

 போராட்டத்திற்குப் பிறகு பெறும் வெற்றி மிகவும் இனிப்பாக இருக்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1.மின்சாரம் போன்ற எரி பொருட்கள் வீணாக்காமல் சிக்கனமாக உபயோகிப்பேன்.

2.சூரிய சக்தியை பயன்படுத்த முயற்சிப்பேன்.

பொன்மொழி :

என்றும் நினைவில் கொள்.மனிதனாகப் பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது - கார்ல் மார்க்ஸ் 

பொது அறிவு : 

01. நமது உடலின் ஆக்சிஜன் படகு என்று அழைக்கப்படுவது எது? 

  ஹீமோகுளோபின்(Hemoglobin)

02. இந்தியாவில் செம்பு அதிகம் கிடைக்கும் மாநிலம் எது? 

           ராஜஸ்தான்(Rajasthan )

English words :

Take up - start a hobby or something: ஏதோ ஒரு காரியம் அல்லது ஒரு பொழுது போக்கு அம்சம் தொடங்குதல்

தமிழ் இலக்கணம்

ஒற்றெழுத்து விதிகள் என்பவை தமிழில் இரண்டு சொற்கள் இணையும்போது சில வல்லின மெய்கள் (க், ச், த், ப்) மிகுந்து வரும் அல்லது இயல்பாக இருக்கும் என்னும் இலக்கண விதியாகும்.



1.நிலைமொழியில் உயிர்: முதல் சொல்லின் இறுதியில் உயிர் எழுத்து வந்து, இரண்டாம் சொல்லின் முதலில் 'க', 'ச', 'த', 'ப' வந்தால், வல்லினம் மிகுந்து வரும். 

எ.கா: பள்ளி + கூடம் = பள்ளிக்கூடம்

அறிவியல் களஞ்சியம் :

 புவி வெப்பத்தை அதிகரிக்க வைக்கும் பசுமை இல்ல வாயுக்களில் முக்கியமானது மீத்தேன். இது பசுக்களின் சாணத்தில் இருந்து அதிகளவில் வெளிவருகிறது. சுவீடன் நாட்டு விவசாய பல்கலையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பசுஞ்சாணத்தில் 'ஆஸ்பராகாப்சிஸ் டாக்ஸ்ஃபோர்மிஸ்' எனும் சிவப்பு நிறப்பாசியைச் சேர்ப்பதன் வாயிலாக, அதிலிருந்து உற்பத்தி ஆகும் மீத்தேனை, 44 சதவீத அளவுக்குக் குறைக்க முடியும் என்று கண்டுபிடித்துள்ளனர்.

அக்டோபர் 06

புலமைப்பித்தன் அவர்களின் நினைவுநாள்  



புலமைப்பித்தன் (Pulamaipithan, அக்டோபர் 6, 1935 - செப்டம்பர் 8, 2021) தமிழ் கவிஞர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். புலமைப்பித்தன் கோயமுத்தூரில் பிறந்தவர். இவரது இயற்பெயர் ராமசாமி ஆகும். தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதை நான்கு முறை பெற்றிருக்கும் புலமைப்பித்தன், சட்டமேலவை உறுப்பினர் மற்றும் அரசவைக் கவிஞர் ஆகிய பொறுப்புகளையும் அலங்கரித்திருக்கிறார்.
நீதிக்கதை

 குரு சொன்ன அறிவுரை



ஒரு நாட்டின் மன்னர் தனது மகனை குருகுலத்திற்கு கல்வி கற்க அனுப்பி வைத்தார். அவனும் குருகுலத்தில் மன்னர் மகன் என்ற அகந்தையை விடுத்து அனைத்து சீடர்களுடனும் ஒற்றுமையாக பழகி வந்தான். குரு சொல்லும் அனைத்து கட்டளைகளையும் மிகுந்த பணிவுடன் செய்து வந்தான். இப்படியே குருகுலத்தில் பல ஆண்டுகளாக கல்வி பயின்று வந்தான். ஒரு நாள் கல்வி பயின்று முடித்து தன்னுடைய அரண்மனைக்கு செல்ல வேண்டிய நாள் வந்தது. 



மன்னரின் மகன் குருகுலத்தில் இருந்து விடைபெற்று தன் நாட்டிற்கு செல்லும் முன் குருவிடம் ஆசீர்வாதம் வாங்க சென்றான். அப்போது மன்னரின் மகனைப் பார்த்து, குரு, நீ முறம் மாதிரி இரு! சல்லடை மாதிரி இருக்காதே!! என்று அறிவுரை கூறினார். மன்னனின் மகனும், சரி சுவாமி! நான் முறமாகவே இருக்கிறேன் என்றான்.



இதன் பொருள் என்னவென்று மன்னனுக்கு புரியவில்லை. தன் மகனிடம் கேட்டார் மன்னர். அதற்கு அவருடைய மகன், சல்லடை, நல்ல விஷயங்களை எல்லாம் கீழே தள்ளிவிட்டு, தேவையில்லாத கழிவுகளையும், கல்லையும் மண்ணையும் தான் வைத்துக் கொள்ளும். ஆனால் முறமோ, பதர், கல், மண் போன்றவற்றைக் கீழேத் தள்ளிவிட்டு நல்ல விஷயங்களை மட்டும் தக்க வைத்துக் கொள்ளும். இது தான் குரு சொன்ன அறிவுரை என்று கூறினான். குரு கூறிய அறிவுரைப்படியே மன்னரின் மகன் கடைப்பிடிக்கலானான்.



நீதி :

நல்ல விஷயங்களை மட்டும் மனதில் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

இன்றைய செய்திகள்

06.10.2025


⭐சென்னையில் தீபாவளி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்- 18 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு

⭐இருமல் மருந்தால் குழந்தைகள் உயிரிழப்பு: மத்திய சுகாதார அமைச்சகம் அவசர ஆலோசனை

⭐வங்கதேச இறக்குமதி குறைந்ததால் உள்நாட்டு சந்தைகளில் திருப்பூர் ஆடைகளின் தேவை அதிகரிப்பு

⭐நேபாளில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு - 47 பேர் உயிரிழப்பு

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀 இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.

🏀 இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி இடையே ஒரு முக்கியமான 2026 உலகக் கோப்பை முன்னிலை பெற்ற கால்பந்து போட்டி நடைபெறுகிறது.

Today's Headlines

⭐ In and around Chennai for Diwali security arrangements are intensified, 18 thousand policemen were on duty in supervising the city 

⭐ Union Health Ministry discussing urgently on child deaths by cough medicine.

⭐Demand for Tirupur garments in domestic markets increases as Bangladeshi imports declined

 ⭐47 people died due to heavy rains, floods, landslides in Nepal 

 *SPORTS NEWS* 

🏀 The World Cup cricket match is underway between India and Australia. 

🏀 An important 2026 World Cup qualifying football match is taking place between England and Germany.


JOIN KALVICHUDAR CHANNEL