t> கல்விச்சுடர் கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

16 June 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 16.06.2025




திருக்குறள்:

குறள் 782 :

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு.

விளக்கம் :
அறிவுள்ளவர்களுடன் கொள்ளும் நட்பு பிறைநிலவாகத் தொடங்கி முழுநிலவாக வளரும், அறிவில்லாதவர்களுடன் கொள்ளும் நட்போ முழுமதிபோல் முளைத்துப் பின்னர் தேய்பிறையாகக் குறைந்து மறைந்து போகும்.

பழமொழி :
Politeness is the flower of humanity.

நற்பண்புகள் மனித இனத்தின் மலர்கள்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. காகம் ஒற்றுமையையும், தேனீயும் எறும்புகளும் சுறுசுறுப்பையும் போதிக்கின்றன.

2. இயற்கையை காப்பதோடு மட்டும் அல்லாது அவற்றில் இருந்து பாடமும் கற்றுக் கொள்வேன்.

பொன்மொழி :

அடித்தல் என்பது ஒரு சிறந்த வாழ்க்கையை வாழ்வதற்கான அடிப்படை கருவியாகும் - ஜோசப் அடிசன்

பொது அறிவு :

01.இந்தியாவில் வெளியான முதல் பத்திரிக்கை எது?



பெங்கால் கெஜட்
The Bengal Gazette

02.தமிழ்நாட்டில் புகழ்பெற்ற சித்தன்னவாசல் ஓவியங்கள் உள்ள மாவட்டம் எது?


புதுக்கோட்டை மாவட்டம்
Pudukottai District
English words & Tips :

 need - தேவை 
 
 reality - நிஜம்

Grammar Tips

Usage of preposition 
at, on and in 

at. comes before time 
On. comes before days
In. Comes before seasons,month and year
அறிவியல் களஞ்சியம் :

 பூமியிலிருந்து மிக தொலைவில் உள்ள நட்சத்திரத்தின் புகைப்படம் நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியால் எடுக்கப்பட்டது. இந்த நட்சத்திரம் 1290 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.

ஜூன் 16

சித்தரஞ்சன் தாஸ் அவர்களின் நினைவுநாள்



தேசபந்து சித்தரஞ்சன் தாஸ் (வங்காள மொழி:চিত্তরঞ্জন দাস) (நவம்பர் 5, 1870 - ஜூன் 16, 1925) இந்திய விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்கை ஆற்றியவர்.

தேசபந்து சித்தரஞ்சன் தாஸ் என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர். 1917- ஆம் ஆண்டிலிருந்து 1925- ஆம் ஆண்டு வரை தீவிர அரசியலில் ஈடுபட்டவர். இவர் பூபன் மோகன் தாஸ் என்பவருக்குப் பிறந்தார். இங்கிலாந்தில் சட்டக் கல்வி கல்வி கற்றவர், 1909இல் அலிப்பூர் குண்டுவெடிப்பு வழக்கில் அரவிந்தருக்கு ஆதரவாக வெற்றிகரமாக வாதாடினார்.

இவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் அரசியல் குரு.

அவரது அரசியல் ஞானத்தாலும் பேச்சுத் திறமையாலும் அவர் இந்திய தேசிய காங்கிரஸில் முக்கியமான நபராக உயர்ந்தார்.அவர் கிராமங்களை முன்னேற்றி கைத்தொழில்களை வளர்க்க விரும்பினார். சுய ராஜ்ஜியக் கட்சித் தலைவர். சாதி வேற்றுமையையும் தீண்டாமையையும் வெறுத்தவர். பெண்கள் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டவர். புகழ் பெற்ற வழக்கறிஞராக இருந்தபோதும் சுதந்திரப் போராட்டத்திற்காக தனது தொழிலைத் தியாகம் செய்தவர்.


பிரபுல்லா சந்திர ராய் அவர்களின் நினைவுநாள்

பிரபுல்லா சந்திர ராய் (Acharya Prafulla Chandra Ray - வங்கமொழியில் - প্রফুল্ল চন্দ্র রায়, ஆகத்து 2, 1861 - சூன் 16, 1944) ஒரு வங்கக் கல்வியாளர், வேதியியலாளர், வணிகர். சமூக சேவையாளர், ஆயுர்வேத மருத்துவம் பற்றி ஆய்வுகள் செய்தவர். லண்டனில் அறிவியல் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியர். இந்திய வேதியியல் கழகத்தைத் தொடங்கியவர். இந்திய விடுதலைப் போரில் பங்கு கொண்டவர். பாதரச நைட்ரைட்டு என்ற அதிக நிலைத்தன்மை கொண்ட சேர்மத்தைக் கண்டு பிடித்தவர்.
நீதிக்கதை

 காலத்தின் அருமையை அறிவோம்

விஜயபுரி என்ற நாட்டை விவேகவர்மன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவன் அரசவையில் நன்கு கற்றிருந்த அறிஞர்கள் இடம் பெற்றிருந்தனர். 

அரசன் ஒரு நாள் அந்த அறிஞர்களை பார்த்து, “அறிஞர் பெருமக்களே வாழ்க்கையில் மிகவும் மதிப்பு வாய்ந்த பொருள் எது?” என்று கேட்டான். 

இந்த கேள்வியை கேட்டதும், முதல் அறிஞர், “வாழ்க்கையில் மிகவும் மதிப்பு வாய்ந்த பொருள் உயிர்தான். உயிரில்லை என்றால் நம் வாழ்க்கையில் ஒன்றும் அனுபவிக்க முடியாது” என்றான். 

இரண்டாவது அறிஞர், “மன்னா, வாழ்க்கையில் மிகவும் மதிப்பு வாய்ந்தது அறிவுதான். அறிவில்லாமல் ஒருவரும் வாழ முடியாது” என்று பதிலளித்தார். 

மூன்றாவது அறிஞர் எழுந்து, “அரசே, வாழ்க்கையில் பொறுமை இன்றி நாம் ஒருகணம் கூட வாழ முடியாது. எனவே மிகவும் விலை உயர்ந்தது பொறுமை தான்” என்று பதில் அளித்தார்.

நான்காவது அறிஞர், “அரசே, நம்ம பூமிக்கு வேண்டியஆற்றல் சூரியனிடமிருந்து தான் கிடைக்கிறது. சூரியன் இல்லை என்றால் பூமியில் உயிர்கள் கிடையாது. எனவே சூரியன்தான் உயர்ந்தது” என்றான். 

ஐந்தாவது அறிஞர், “வாழ்க்கையில் அனைத்தும் இருந்து அன்பு இல்லாவிட்டால் மனிதன் வாழ்ந்து ஒரு பயணும் இல்லை. எனவே அன்பு தான் மிக மதிப்பு வாய்ந்தது” என்றார். 

இறுதியாக ஓர் அறிஞர் எழுந்து, “அரசே, காலம் தான் அனைத்தையும் விட மிக மிக மதிப்பு வாய்ந்த பொருள். நமக்கு காலம் இல்லையானால் உயிர் இருந்து என்ன பயன்?. அறிவை பயன்படுத்த நமக்கு நேரம் எது?. பொறுமையாக இருக்க ஏது அவகாசம். சூரியனை பயன்படுத்த ஏது காலம்?. அன்பு காட்டை ஏது வாய்ப்பு? எனவே உலகிலேயே மிகவும் மதிப்பு வாய்ந்த பொருள் காலம்தான்”.

அரசர் அந்த ஆறாவது அறிஞர் கூறிய கருத்துதான் சிறந்தது என்று பாராட்டி அந்த கருத்தை ஏற்றுக் கொண்டார். காலத்தின் அருமையை குறித்து மிகவும் அழகாக விளக்கிய ஆறாவது அறிஞருக்கு அவர் மனம் விரும்பும் வகையில் எண்ணற்ற பரிசுகளை கொடுத்து பாராட்டினார். 

அது மட்டுமல்ல அவரை தனது அமைச்சராக நியமித்து கௌரவப்படுத்தினார். மற்ற ஐந்து அறிஞர்களும் அரசரின் செயலை பாராட்டினார்.

இன்றைய செய்திகள்

16.06.2025

⭐இன்றைய செய்திகள் 

⭐ " IITல் உயர்கல்வி பயில தேர்ச்சி பெற்ற பழங்குடியின மாணவிக்கு வீடு மற்றும் லேப்டாப் வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

⭐" போயிங் 787
விமானங்கள் ஆய்வு. ஏர் இந்தியா நிறுவனம் வைத்திருக்கும் போயிங் 787 8/9 ஏக விமானங்களை ஆய்வு செய்ய விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவு.

⭐ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் "ஆபரேஷன் ரைசிங் லயன்"-ஐ தொடங்கியது.

🏀 விளையாட்டுச் செய்திகள்.

🏀ஐ.எஸ்.எஸ்.எஃப் உலகக் கோப்பையில் இந்தியாவின் துப்பாக்கி சுடும் வீரர்கள் தங்கம் வென்றனர்.

🏀வருடாந்திர கால்பந்து பிரபல-தொண்டு போட்டி மான்செஸ்டர் யுனைடெட்டின் ஓல்ட் டிராஃபோர்டில் தொடங்குகிறது.

Today's Headlines

TODAY'S HEADLINES*
✏️ Tamilnadu Chief Minister M.K. Stalin provided a house and a laptop to a tribal student who qualified for higher education at IIT

✏️ Boeing 787 aircraft inspection. The Directorate General of Civil Aviation has ordered an inspection of the Boeing 787 8/9 aircraft owned by Air India.

✏️ Israel launched "Operation Rising Lion" against Iran.

 *SPORTS NEWS*

🏀 Indian shooters won gold at ISSF World Cup.

🏀 The annual football celebrity-charity tournament kicks off at Manchester United's Old Trafford.

.

14 June 2025

KALANJIYAM APP - New Version 1.22.3 - DIRECT DOWNLOAD LINK ATTACHED What's New? SGSP Insurance Detail Integrated


KALANJIYAM APP - New Version 1.22.3 - DIRECT DOWNLOAD LINK ATTACHED 

What's New?
SGSP Insurance Detail Integrated

13 June 2025

தொடக்கக் கல்வித் துறை மாதிரி கால அட்டவணை



தொடக்கக் கல்வித் துறை  மாதிரி கால அட்டவணை Download Here

பள்ளிக் கல்வித் துறையின் மாதிரி கால அட்டவணை


பள்ளிக் கல்வித் துறையின் மாதிரி கால அட்டவணை Download Here 

பள்ளிக் கல்வித் துறையின் 2025-2026ஆம் கல்வியாண்டு நாட்காட்டி வெளியீடு!


தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் 2025-2026ஆம் கல்வியாண்டு நாட்காட்டி DOWNLOAD HERE

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.06.2025




திருக்குறள்:

குறள் 10:

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

விளக்கம் :
வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்.

பழமொழி :
Beat after beat will make even a stone move. 

அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. அழியாத செல்வம் கல்வியே எனவே இந்த செல்வத்தை நன்கு முயற்சி செய்து அடைவேன்.

2. என் ஆசிரியர் மற்றும் பெற்றோர் எனக்கு கொடுக்கும் பொறுப்பை திருந்த செய்வேன்.

பொன்மொழி :

நோய் இல்லை என்று மனதில் உறுதி செய் ஏனென்றால் மனம் போல உடல் அமையும். - மகாகவி பாரதியார் 

பொது அறிவு : 

01.உலகின் மிக நீளமான மலைத்தொடர் எது?

         ஆண்டிஸ் மலைத்தொடர்  

         Andes mountain range

02. தமிழ்நாட்டில் கும்பக்கரை நீர்வீழ்ச்சி எந்த மாவட்டத்தில் உள்ளது?

              தேனி மாவட்டம்

              Theni district 

English words & Tips :

 plan - திட்டமிடு 

 want - வேண்டும்

Grammar Tips : 

Subject-Verb Agreement:
Ensure your verbs match your subject in number (singular or plural). For example, "The cat runs," not "The cat run". 

* Avoid Double Negatives: Phrases like "I don't have no money" are incorrect. Use a single negative.
அறிவியல் களஞ்சியம் :

 மூளையில் குருதி ஓட்டத்தைக் கண்காணிப்பது சுலபமல்ல. அஞ்சல்தலை அளவே உள்ள ஒரு புதிய கருவியை அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலை வடிவமைத்துள்ளது. மூளையில் அல்ட்ரா சவுண்ட் தொழில்நுட்பம் வாயிலாக இந்தக் கருவி ரத்த ஓட்டத்தை அறிய உதவுகிறது.

நீதிக்கதை

 தவளை கற்று தரும் பாடம்

ஒரு ஊரில் நிறைய தவளைகள் இருந்தன. சிறிய பெரிய தவளைகளெல்லாம் உள்ளேயே ஒரு பந்தயம் வைக்கலாம் என்று முடிவு செய்தது. அது என்ன போட்டியென்றால் ஓட்டப்பந்தய போட்டி ஆகும். ஓட்டப் பந்தயத்திற்கு எல்லா தவளைகளும் தயாராகி வந்தன. தவளைகளின் ரன்னிங் ரேஸ் போட்டியை பார்ப்பதற்காகவே ஆர்வமாக கூடி இருந்தார்கள். ஓட்டப்பந்தயத்தில் அருகிலுள்ள டவரை தொட வேண்டும். இது தான் அந்த போட்டியோடு விதி ஆகும்.

 அந்த தவளையை தான் வெற்றி பெற்ற தவளை என்று முடிவு சொல்லப்பட்டது. போட்டி தொடங்கியது, போட்டியை காண வந்த அனைவரும் சொன்னார்கள். இது ஒரு சுலபமான போட்டியே கிடையாது. இந்தப் போட்டி ஒரு கடுமையான போட்டி ஆகும். முதலில் இந்த தவளைகளில் எந்த ஒரு தவளையும் கோபுர உச்சியை அடையவே முடியாது. அந்த தவளைகளைப் பார்த்து கூறிக் கொண்டே இருந்தார்கள். மேலும் இந்த தவளைகளில் எந்த ஒரு கோபுர உச்சியை டச் பண்ண கூட இல்லை என்று பேசிக் கொண்டே இருந்தார்கள்.

இந்த போட்டியை நேரில் காண நிறைய மக்கள் வந்தார்கள். அவர்கள் ஒவ்வொரு வரும் பேசும் கேட்ட அந்த எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்பட்டது. நம்மால் இந்த போட்டியில் ஜெயிக்கவே முடியாது போன்று இருக்கிறதே என்று பண்ணி ஒரு அந்த போட்டியில் இருந்து பின் வாங்க முடிவு செய்தன. இந்த போட்டியிலிருந்து கொள்வதாக அறிவித்தன. அது மட்டுமில்லாமல் அந்த கோபுர உச்சியை தொட போவதில்லை. அந்த டவரை தொடுவது என்பது என்று ஒரு பேசிக் கொண்டே இருந்தார்கள்.

 பல தவளைகளும் ஆகி போட்டியிலிருந்து ஐ நீக்கி கொண்டன. இப்படியே நிறைய போட்டியிலிருந்து விலகிக் கொண்டது. ஒரே ஒரு தவளை மட்டும் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி கொண்டிருந்தது. கோபுர உச்சியைத் தொடுவது என்று நினைத்தது. அதனால் பல தவளைகளும் பெயர் நீக்கம் செய்தன. இருந்தாலும் கூட, அந்த ஒரு தவளை மட்டும் கோபுர உச்சியை நோக்கி மெல்ல மெல்ல சென்றுக் கொண்டே இருந்தது. ஒரு சில வினாடிகளில் அந்த குட்டி ஆனது டவரை அடைந்து வெற்றியும் பெற்றது. அனைவரும் வியந்து போய் பாராட்டினார்கள்!. குட்டி ஆல் மட்டும் எப்படி டவரை அடைந்து வெற்றி பெற முடிந்தது. போட்டியை -ஆக பார்த்து கொண்டிருந்த கேட்டார்கள். உன்னால் மட்டும் எப்படி அந்த டவரை தொட முடிந்தது. அந்த தவளையை அழைத்து கேட்டார்கள்.

வெற்றி அடைந்த அந்த தவளையானது பெறுவதற்காக மேடையின் மீது ஏறியது. அப்போது தான் அங்கே இருந்த மக்களுக்கு ஒரு உண்மை தெரிய வந்தது. அந்த டவரை தொட்டு வெற்றியடைந்த தவளைக்கு காது கேட்காது. மற்றவர்கள் பேசுவதை கேட்க முடியாது என்று தெரிந்தது. அனைவரும் குட்டி தவளையின் திறமையை கண்டு புகழ்ந்தார்கள். பாராட்டி பரிசுயும் கொடுத்தார்கள். அந்த தவளையும் மகிழ்ச்சியாக வாங்கிச் சென்றது.

இன்றைய செய்திகள்

13.06.2025


⭐தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு ஜூலை 1 முதல் ஆதார் கட்டாயம்: ரயில்வே அறிவிப்பு.

⭐போதைப்பொருள் விற்பனை, கஞ்சா கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களுக்கு துணைபோகும் காவல் துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சட்ட ஒழுங்கு கூடுதல் இயக்குநர் டேவிட்சன் தேவாசிர்வாதம் தெரிவித்துள்ளார்.

⭐தமிழ்நாட்டில் வசிக்கும் வட மாநில தொழிலாளர்களை கணக்கெடுக்கும் பணியை தமிழக அரசு தொடங்கி உள்ளது.

⭐ அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என டாடா குழுமம் அறிவிப்பு. இதில் குஜராத் முன்னாள் முதலமைச்சர் பலி.

🏀 விளையாட்டுச் செய்திகள்.

🏀FIH புரோ லீக் ஹாக்கியில் ஐரோப்பிய லெக்கில் இந்தியா அர்ஜென்டினாவிடம் 3-4 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

🏀தேசிய முதுநிலை விளையாட்டுப் போட்டிகளில் நான்கு தங்கப் பதக்கங்களை வென்றார் 70 வயதான அசாம் தடகள வீரர்.

Today's Headlines


✏️ From 1st July onwards Aadhaar is mandatory for Tatkal ticket booking Indian Railways' announcement
 
✏️ Tamil Nadu Law and Order Additional Director Davidson Devasirvadham has said that strict action will be taken against police personnel who assist in illegal activities including drug trafficking and cannabis smuggling.

✏️ The Tamil Nadu government has started the process of enumerating the workers from northern states who are living in Tamil Nadu.

✏️ Tata Group announces Rs 1 crore compensation to families of those died in Ahmedabad Air India plane crash.

 *SPORTS NEWS* 

🏀 India lost 3-4 to Argentina in the European leg of the FIH Pro League hockey. 

🏀 70-year-old Assamese athlete won four gold medals at the National Senior Games


12 June 2025

பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் CEO, DEO & APO ஆகியோருக்கான மாவட்ட வாரியான ஆய்வுக் கூட்டம் - சென்னையில் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது

பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் CEO, DEO & APO ஆகியோருக்கான மாவட்ட வாரியான ஆய்வுக் கூட்டம் 23.06.2025 & 24.06.2025 ஆகிய நாட்களில் சென்னையில் நடைபெறுகிறது!



JOIN KALVICHUDAR CHANNEL