| KALVICHUDAR TABLE | ||||||||||||
| 1-5th | 6-9th | 10th | 12th | |||||||||
17 December 2019
உள்ளாட்சி தேர்தலில் கவனம் அலுவலர்களுக்கு அழுத்தம்
உள்ளாட்சி தேர்தல் நடந்து எட்டு ஆண்டுகள் கடந்த விட்ட நிலையில், நடக்க இருக்கும் தேர்தலில் ஓட்டுச்சாவடி அலுவலர்களாக பணியாற்ற இருக்கும், 50 சதவீதம் பேருக்கு தேர்தல் குறித்த முன் அனுபவம் இல்லை.தேர்தலில் மிகக்குறைந்த ஓட்டுகள் தான் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும். மேலும், உள்ளூர் அளவிலான கவுரவ பிரச்னையாக தேர்தல் முடிவுகள் பார்க்கப்படும்.இதனால், தேர்தல் ஆணையத்தில் வழிகாட்டலின் படி ஓட்டுப்பதிவை மிகக்கவனமாக நடத்த வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர்.ஓட்டுப்பதிவின் போது பிரச்னை ஏற்பட்டால், உடனடியாக சம்பந்தப்பட்ட ஓட்டுச்சாவடிக்கு சென்று, பேசி சமரசம் செய்ய மண்டல அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.போலீசாரிடமும் முழு ஒத்துழைப்பும் கோரியுள்ளனர்.