மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் நடுநிலை பிரிவில் முதலிடம் பிடித்த சேக்கிழார் அரசு பள்ளி மாணவர் கவுரவிக்கப்பட்டார். புதுச்சேரியில் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி அண்மையில் நடந்தது. இதில் சேக்கிழார் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர் சஞ்சீவிகுமார், அறிவியல் ஆசிரியர் பாக்கியலட்சுமி வழிகாட்டுதலோடு சமர்பித்த பயன் பைட்டர் ரோபோ என்ற படைப்பு மாநில அளவில் நடுநிலை பிரிவில் முதலிடம் பெற்று, தென்னிந்திய அறிவியல் கண்காட்சியில் இடம் பெறும் தகுதியை பெற்றது.வெற்றிப் பெற்ற மாணவர் சஞ்சீவ்குமார், பள்ளி ஆசிரியர் பாக்கியலட்சுமி ஆகியோரை கல்வியமைச்சர் கமலக்கண்ணன் சுழற்கோப்பை, சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.பள்ளி பொறுப்பாசிரியர் கோமதி, மற்றும் அனைத்து பள்ளி ஆசிரியர்களும் மாணவரை சால்வை அணிவித்து பாராட்டினர்.
| KALVICHUDAR TABLE | ||||||||||||
| 1-5th | 6-9th | 10th | 12th | |||||||||