t> கல்விச்சுடர் தமிழகத்தில் நாளை பலத்த மழைக்கு வாய்ப்பு - கல்விச்சுடர் . -->

 

Now Online

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் மேலான படைப்புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அல்லது udhayakumarind@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன் கல்விச்சுடர்...

Pages


.

11 December 2019

தமிழகத்தில் நாளை பலத்த மழைக்கு வாய்ப்பு

 வலுகூடிய கீழ்த்திசை காற்று காரணமாக தமிழகத்தின் சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை (டிச. 13) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது:
 தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கை மற்றும் தென் தமிழக கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்தது. தற்போது, வலுகூடிய கிழக்குத் திசை காற்று காரணமாக தமிழகத்தின் சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை (டிச. 13) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. புதன்கிழமை காலை 8.30 மணியுடன் கூடிய கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் எங்கும் மழை பெய்யவில்லை. சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், மாலை மற்றும் இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்றனா்.

JOIN KALVICHUDAR CHANNEL