இந்நிலையில் இந்திய அரசாங்கம் வாட்ஸ்அப், டெலிகிராம் போன்று தகவல்களைப் பரிமாறிக்கொள்ள தனக்கென பிரத்யேகச் செயலி ஒன்றை உருவாக்கி வருகிறது. இதற்கு ஜிம்ஸ் (Government Instant Messaging System, GIMS) என்று பெயரிடப்பட்டுள்ளது. தற்போது இந்தச் செயலியானது ஒடிசா போன்ற சில மாநிலங்களில் சோதனைக் கட்டத்தில் இருக்கிறது.
இந்திய அரசானது, மத்திய அரசு அலுவலகங்களிலும் மாநில அரசு அலுவலகங்களிலும் தங்களுக்குள் தகவல்கள் பரிமாற்றத்திற்கென இந்த ஜிம்ஸ் ஆப்பை உருவாக்கி வருகிறது. இதன்மூலம் வெளிநாட்டு ஆப்களால் ஏற்படும் தகவல் திருட்டு மற்றும் ஊடுருவலைத் தடுக்கமுடியும் என்பதே இதன் முக்கியக் காரணமாகும்.
ஜிம்ஸ் அரசு துறைகளில் எப்படியான மாற்றத்தைக் கொண்டுவரப்போகிறது எனப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
Source: Vikatan
