இரண்டு கட்டமாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் நேற்று காலை முதல் நடந்து வருகின்றன.
வாக்கு எண்ணும் பணியானது இன்று வரை தொடரும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்திருந்தார்.
வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ள பெண் ஊழியர்கள் இன்றும் தொடர்ந்து வாக்கு எண்ணும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு இருப்பதால் சனிக்கிழமை பள்ளிக்கு வருவதில் உடல்நல பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பள்ளியை திங்கட்கிழமை அன்று திறக்க வேண்டும் அல்லது சனிக்கிழமை அன்று சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
.