t> கல்விச்சுடர் ஒப்புதலுக்காக காத்திருக்கும் தேசிய மக்கள் தொகை பதிவு படிவம் ; பெற்றோரின் பிறந்த இடம் குறித்த கேள்வி இடம் பெறும் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

1 January 2020

ஒப்புதலுக்காக காத்திருக்கும் தேசிய மக்கள் தொகை பதிவு படிவம் ; பெற்றோரின் பிறந்த இடம் குறித்த கேள்வி இடம் பெறும்

Source : Dinathanthi
தேசிய மக்கள் தொகை பதிவுக்கும் (என்.பி.ஆர்),  தேசிய குடியுரிமை பதிவுக்கும் (என்.ஆர்.சி) எந்த தொடர்பும் இல்லை என சில தினங்களுக்கு முன் மத்திய உள்துறை  மந்திரி அமித் ஷா  தெளிவுப்படுத்தி இருந்தார். தந்தை மற்றும் தாயின் பிறந்த இடம் குறித்த விவரங்களைத் தேடும் தேசிய மக்கள் தொகை பதிவு (என்.பி.ஆர்) 2020 படிவம் சமூக ஊடகங்களில்  பரவத்தொடங்கியதைத் தொடர்ந்து குழப்பம் நிலவியது. என்.பி.ஆருக்கான தகவல்களை சேகரிப்பதற்கான படிவம் அல்லது அட்டவணை இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று கூறப்பட்டது.

செப்டம்பர் 2019ல் சோதனை கட்டத்தில் பயன்படுத்தப்பட்ட தேசிய மக்கள் தொகை பதிவு (என்.பிஆர்) படிவம், “தந்தை மற்றும் தாயின் பிறந்த இடம்” பற்றிய விவரங்கள் குறித்த விவரம் இறுதி செய்யப்படலாம்.74 மாவட்டங்களில் தகவல்களை  சேகரிக்கப் பயன்படுத்தப்பட்ட சோதனை  படிவத்திற்கு சுமார் 30 லட்சம் பேர் பதிலளித்து உள்ளனர். . இதில்  21 விவரங்கள் அடங்கி உள்ளன.  குறிப்பாக “தந்தை மற்றும் தாயின் பிறந்த இடம், கடைசியாக வசிக்கும் இடம்”, ஆதார் (விரும்பினால்), வாக்காளர் அடையாள அட்டை, மொபைல் போன் மற்றும் ஓட்டுநர் உரிம எண்களுடன் விவரங்களை கேட்கிறது.2010 ஆம் ஆண்டில் முதன்முதலில் நடத்தப்பட்டதேசிய மக்கள்தொகை பதிவு பின்னர் 2015ல் புதுப்பிக்கப்பட்டது. அதில் பின்வரும் 15 விவரங்களை சேகரித்தது. நபரின் பெயர், வீட்டுத் தலைவருடனான உறவு, தந்தையின் பெயர், தாயின் பெயர், மனைவியின் பெயர் (திருமணமானால்), பாலினம், பிறந்த தேதி, திருமண நிலை, பிறந்த இடம், தேசியம் (அறிவிக்கப்பட்டபடி), வழக்கமான வசிப்பிடத்தின் தற்போதைய முகவரி, தற்போதைய முகவரியில் தங்கியிருக்கும் காலம், நிரந்தர குடியிருப்பு முகவரி, தொழில் / செயல்பாடு மற்றும் கல்வித் தகுதி ஆகியவை இடம் பெற்று இருக்கும்.தற்போதைய என்பிஆரில் 119 கோடி மக்களின் தகவல்கள் உள்ளன. பதிலளித்தவர்கள் யாரும் எதிர்மறையான கருத்தை தெரிவிக்கவில்லை. இறுதி படிவம் அப்படியே இருக்கும் என்று ஒரு அதிகாரி கூறினார். மேலும்  கணக்கீட்டாளரின் வருகை குறித்து குடும்பங்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படும். இதனால் அனைத்து நபர்களின் ஆவணங்களும் சரிபார்க்க வசதியாக இருக்கும்.குடும்பத்தில் 15 உறுப்பினர்கள் இருந்தால், கணக்கீட்டாளர்கள் அவர்களுக்கு ஒரு முன் அறிவிப்பைக் கொடுப்பார்கள். இதனால் களப்பயணம் மேற்கொள்ளப்படும்போது அனைவரின் ஆவணங்களும் கிடைக்கும் வகையில்  இருக்கும். ஆவணங்களை கணக்காளர் பார்வையிடுவார்.புதிய என்.பி.ஆர் தரவு 2020 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் கணக்கெடுப்பு பயிற்சிகளுடன் நடத்தப்படும்.ஒரு நபரின் குடியுரிமை நிலையை தீர்மானிக்க உள்ளூர் அதிகாரிகளுக்கு விதிகள் அதிகாரம் அளிக்கின்றன. சுப்ரீம் கோர்ட்டின் மேற்பார்வையில் நடத்தப்பட்ட அசாம்- என்.ஆர்.சி. 3.29 கோடி குடியிருப்பாளர்களில் 19 லட்சம் பேரை தள்ளுபடி செய்தது. அசாமில் நடத்தப்பட்ட பயிற்சியின் அடிப்படையில் மக்கள் இந்தியாவில் தங்கியிருப்பதை நிரூபிக்க பழைய ஆவணங்களை தோண்டி எடுக்க வேண்டியிருக்கும் என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது.

JOIN KALVICHUDAR CHANNEL