t> கல்விச்சுடர் திரிபுராவில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களாகும் என்ஜினீயரிங் பட்டதாரிகள் தகுதித்தேர்வு மூலம் நியமனம் - கல்விச்சுடர் . -->

 

Now Online

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் மேலான படைப்புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அல்லது udhayakumarind@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன் கல்விச்சுடர்...

Pages


.

5 January 2020

திரிபுராவில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களாகும் என்ஜினீயரிங் பட்டதாரிகள் தகுதித்தேர்வு மூலம் நியமனம்

நாடு முழுவதும் லட்சக்கணக்கான என்ஜினீயரிங் பட்டதாரிகள் வேலையின்றி தவித்து வருகின்றனர். இவர்களை பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்க பல்வேறு மாநிலங்கள் முன்வந்துள்ளன.


அந்தவகையில் திரிபுராவில் கடந்த மாதம் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வை (டெட்) பிற பட்டதாரி தேர்வர்களுடன் இணைந்து ஏராளமான என்ஜினீயரிங் பட்டதாரிகளும் எழுதினர். இவர்களில் 103 பேர் வெற்றி பெற்று தற்போது ஆசிரியர்களாக தேர்வாகி உள்ளனர். இதில் கான்பூர் ஐ.ஐ.டி.யில் பயின்ற என்ஜினீயரிங் பட்டதாரி ஒருவரும் அடங்குவார்.இதில் ‘டெட்-1’ தேர்வில் வெற்றி பெற்ற 39 பேர் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களாகவும், ‘டெட்-2’ தேர்வில் வெற்றி பெற்ற 64 பேர் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களாவும் நியமிக்கப்பட உள்ளனர். திரிபுரா மாநில அரசின் விதிமுறைகளின்படி இவர்களுக்கு முதல் 5 ஆண்டுகளுக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை மாத ஊதியம் வழங்கப்படும்.கல்வி உரிமை சட்டத்தின்படி பி.எட். முடிக்காதவர்களை ஆசிரியராக நியமிக்க முடியாது. ஆனால் திரிபுராவில் அத்தகைய தகுதி பெற்ற தேர்வர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

JOIN KALVICHUDAR CHANNEL