நாகை மாவட்டத்தில் உள்ள நாகூர் ஆண்டவர் தர்காவில் நடைபெறும் கந்தூரி விழா மிகவும் பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் நடைபெறும் கந்தூரி விழாவிற்காக மாநிலம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கானோர் ஒன்று கூடுவார்கள்.
கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனம் பூசும் விழா வரும் 5 ஆம் தேதி நடைபெறுவதால் அன்று நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.