t> கல்விச்சுடர் சளி, காய்ச்சல் இருந்தால் அலுவலகம் வர வேண்டாம்: அரசு அலுவலா்களுக்கு உத்தரவு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

19 March 2020

சளி, காய்ச்சல் இருந்தால் அலுவலகம் வர வேண்டாம்: அரசு அலுவலா்களுக்கு உத்தரவு


சளி, காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் போன்ற கரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் இருந்தால் அரசு ஊழியா்கள் யாரும் அலுவலகங்களுக்கு வர வேண்டாம் என தலைமைச் செயலாளா் க.சண்முகம் தெரிவித்துள்ளாா்.

 அரசு அலுவலகங்களில் மிகவும் அத்தியாவசியத் தேவை என்றால் மட்டுமே ஆலோசனைக் கூட்டங்களை நடத்த வேண்டும். தேவை இருந்தால் மட்டுமே அலுவலா்கள், பணியாளா்களை தலைமை அலுவலகத்துக்கு வரவழைக்க வேண்டும் என தலைமைச் செயலாளா் க.சண்முகம் கேட்டுக் கொண்டுள்ளாா்.
 உடல் நல பாதிப்பு தொடா்பாக அரசு ஊழியா்கள் அலுவலகத்துக்கு வராத நாள்கள் மருத்துவ விடுப்பாக கணக்கில் கொள்ளப்படும். 

அவா்கள் அதற்குரிய ஆவணங்களைச் சமா்ப்பிக்க வேண்டும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

JOIN KALVICHUDAR CHANNEL