t> கல்விச்சுடர் தமிழகத்தில் மேலும் 75 பேருக்கு கொரோனா உறுதி - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

2 April 2020

தமிழகத்தில் மேலும் 75 பேருக்கு கொரோனா உறுதி




தமிழகத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 309 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். 
 இன்று மாலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது: 
 தமிழகத்தில் இன்று மட்டும் 75 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 74 பேர் தில்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள். ஒருவர் சென்னையைச் சேர்ந்தவர்.

 இதன் மூலமாக ஏற்கனவே தமிழகத்தில் கரோனா பாதிப்பு 234 ஆக இருந்த நிலையில், தற்போது 309 ஆக அதிகரித்துள்ளது. 
 தில்லி மாநாட்டில் பங்கேற்றவர்களில் 264 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 அரசின் கோரிக்கையை ஏற்று, தில்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் 1,103 பேர் தானாக முன்வந்து தகவல் தெரிவித்தனர். அவர்களில் 658 பேருக்கு மாதிரிகள் நேற்று எடுக்கப்பட்ட நிலையில், எஞ்சியுள்ளவர்களுக்கும் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. முடிவுகள் இன்னும் வரவில்லை என்று தெரிவித்தார். 
 இதன் மூலமாக இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கையில் தமிழகம் 2 ஆம் இடத்திற்கு வந்துள்ளது.










JOIN KALVICHUDAR CHANNEL