கொரொனாவின் வீரியம் படிப்படியாக அதிகரித்து வருவதால், மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், 21 நாட்களுக்கு பிறகு நோயின் தீவிரத்தை பார்த்த பிறகே 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதி குறித்து அறிவிக்கப்படும் என்றும் சென்னையில் நடமாடும் காய்கறி கடைகள் திட்டத்தை அமல்படுத்த ஏற்பாடு செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் அனைத்து தொழில்களும் , தொழிலாளர்களும் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர்.
மாணவர்கள், கல்விநிலையங்களுக்கு அரசு விடுமுறை அளித்துள்ளது.
அதேசமயம், 1 முதல்
9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவித்திருந்தார்.
பொதுத்தேர்வு எழுதிவந்த 10 மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மீதித் தேர்வுகள் எப்பொழுது நடக்கும் என்பது பின்னர் அறிவிக்கப்படுமென தமிழக கல்வித்துறை அறித்திருந்தது.
இந்நிலையில், தற்போது செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர், சூழ்நிலையை பொறுத்தே 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து முடிவெடுக்க முடியும்.
நோயின் தன்மை பற்றி அறிந்து மக்கள் ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும். இக்கட்டான நிலையில் பணிபுரியும் காவல்துறையினருக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.