. -->

Now Online

FLASH NEWS


Tuesday 12 May 2020

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் - ஸ்டாலின் வலியுறுத்தல்



தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் எதிர்வரும் ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், 10ம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்க திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.அதுகுறித்த விளக்கத்தில், கொரோனா ஓரளவுக்கு கட்டுக்குள் வந்து, இயல்பு வாழ்க்கை திரும்பியதாக உறுதிப்படுத்திய பிறகு தேர்வை நடத்த வேண்டுமே தவிர தற்போதைய சூழலில் தேவை நடத்தக்கூடாது. மாணவர், ஆசிரியர், பெற்றோரை மன ரீதியாக தயார் செய்த பின் தேர்வு தேதியை அறிவிப்பதே சரியானது என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா ஊரடங்கால் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டிருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் தேர்வுகள் நடைபெறும் என அறிவித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தேர்வு அட்டவணையையும் இன்று வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.