. -->

Now Online

FLASH NEWS


Friday 15 May 2020

திங்கட்கிழமை முதல் 50 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்படும். - தமிழக அரசு அரசாணை வெளியீடு


மே 18-ம் தேதி முதல் 50 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்படும். வாரத்தில் 6 நாட்கள் வேலை நாட்களாக இருக்கும் வகையில் சுழற்சி முறையில் அரசுப் பணியாளர்கள் பணியாற்றுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
 இதுகுறித்து தமிழக அரசு சார்பில் தலைமைச் செயலர் பிறப்பித்த உத்தரவு: 
 கோவிட் பேரிடரால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக மே 3-ம் தேதி முதல் அரசு அலுவலக ஊழியர்கள் எண்ணிக்கை 33 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. மே 18-ம் தேதி முதல் அரசு அலுவலகங்கள் சமூக விலகல் நடைமுறையுடன் வழக்கமான முறையில் இயங்கும்.
 50 சதவீத ஊழியர்களுடன் வரும் நாட்களில் அரசு அலுவலகங்கள் செயல்படும். அதே நேரம் ஊரடங்கு காரணமாக இழந்த வேலை நாட்களை ஈடுகட்டும் விதமாக வாரத்தில் 6 நாட்களும், சனிக்கிழமையும் அலுவலகங்கள் வழக்கமான அலுவலக நேரத்துடன் செயல்படும். 
 கீழ்கண்ட நடைமுறைகள் வர உள்ளன:
 * வாரத்தில் 6 நாட்களும் சனிக்கிழமையும் வேலை நாட்கள். வழக்கமான வேலை நேரத்துடன் இயங்கும்.
 *அனைத்து அரசு அலுவலகங்களும் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கும்.
 * ஊழியர்கள் 2 விதமாகப் பிரிக்கப்படுவர். ஒரு குழு திங்கள், செவ்வாய் பணியாற்றினால் அடுத்த குழு புதன் வியாழன் பணியாற்றும். முதல் குழு வெள்ளி, சனி பணியாற்றும்.
 * இவ்வாறு சுழற்சி முறையில் பணியாற்றுபவர்கள் தேவைப்படின் அழைக்கும்போது பணிக்கு வருவார்கள்.
 * அனைத்து குரூப்-ஏ தகுதி அலுவலர்கள், அலுவலகத் தலைமைப் பொறுப்பில் உள்ள அலுவலர்கள் வாரத்தின் அனைத்து நாட்களிலும் அலுவலகம் வரவேண்டும்.
 * அனைத்து அலுவலர்கள்/ அலுவலக ஊழியர்கள், அலுவலகப் பணியாளர்கள் எந்நேரமும் அலுவலகப் பணிக்குத் தயாராக இருக்க வேண்டும், எந்தவித மின்னணு, இ-மெயில், காணொலி அழைப்புக்கும் அவர்கள் பதிலளிக்கத் தயாராக இருக்க வேண்டும்.
 * தேவை இருப்பின் வழக்கமான அலுவலக நடைமுறை என்றில்லாமல் தேவைப்படின் இடையில் உள்ள அலுவலர் இல்லாமல் மேலே உள்ள துறைகளுக்கு தகவல், கோப்புகள் செல்லலாம்.
 * இந்த நடைமுறை அனைத்து அரசு மாவட்ட அளவிலான அரசு அலுவலகங்கள்/ மக்களோடு நேரடித் தொடர்புள்ள கள அளவிலான ஆணையங்கள், போர்டுகள், பல்கலைக்கழகங்கள், கம்பெனிகள், பயிற்சி மையங்கள், கூட்டுறவு அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு சார் அலுவலகங்களுக்குப் பொருந்தும்.
 * காவல்துறை , பொது சுகாதாரத்துறை, மாவட்ட நிர்வாக அலுவலகங்கள், அரசு கருவூலங்கள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு இது பொருந்தாது, அவைகள் வழக்கம்போல் மார்ச் 25 பிறப்பிக்கப்பட்ட பேரிடர் மேலாண்மைச் சட்டம் வழிகாட்டுதல் அடிப்படையில் செயல்படும்.
 * தேவைப்படின் பேருந்து போக்குவரத்து அமைத்துத் தரப்படும். மேற்கண்ட உத்தரவை நடைமுறைப்படுத்துவதை சம்பந்தப்பட்டவர்கள் உரிய முறையில் கண்காணித்து அமல்படுத்தவேண்டும்”.
 இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.