. -->

Now Online

FLASH NEWS


Monday 29 June 2020

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3949 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


தமிழகத்தில் ஜூன் 1-ந்தேதியில் இருந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகி வருகிறது. கடந்த 17-ந்தேதியில் இருந்து 24-ந்தேதி வரை தினந்தோறும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தில் இருந்து 2 ஆயிரத்திற்கு உயர்ந்தது.
அந்த எண்ணிக்கை 25-ந்தேதியில் இருந்து 3 ஆயிரத்தை தாண்டியது. இன்று ஐந்தாவது நாளாகவும் 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு இன்று 3,949 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 86,224 ஆக உயர்ந்துள்ளது.
இன்று 2,212 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இன்று 62 பேர் உயிரிழந்துள்ளனர்.