உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஆசிரியர், ஆசிரியைகளுக்கு கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. மீரட்டில் உள்ள அந்த தனியார் பள்ளியில் ஆசியர்கள் கழிப்பறைக்குச் சென்றபோது அவர்களுக்கேத் தெரியாமல் ரகசிய கேமிராக்களை வைத்து, சர்ச்சைக்குரிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவுசெய்திருக்கின்றனர். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வைத்துக் கொண்டு, சம்பளம் கொடுக்குமாறு கேட்கும்போதெல்லாம் மிரட்டி, சம்பளம் கொடுக்காமலேயே வேலை செய்யவைத்திருக்கிறார் பள்ளியின் நிர்வாகக் குழு செயலாளர்.
Source Puthiya Thalaimurai