. -->

Now Online

FLASH NEWS


Friday 20 November 2020

தேசிய திறனாய்வு தேர்வுக்கு பத்தாம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

 

 2020- 21-ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்புப் பயிலும் மாணவர்கள் தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

 இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிவிக்கையில், 

 2020-2021-ம் கல்வியாண்டில் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள், 2020 டிசம்பர் மாதம் 27-ஆம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) நடைபெறவுள்ள தேசிய திறனாய்வுத் தேர்விற்கு (என்டிஎஸ்இ) விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது.

 விண்ணப்பங்களை http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் 21.11.2020 முதல் 30.11.2020 வரை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ.50/- சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 30.11 .2020. மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்படமாட்டாது. 

 பொதுவான அறிவுரைகள்:  தேர்வர்கள் தேசிய திறனாய்வுத் தேர்விற்கு விண்ணப்பிக்க தங்கள் பள்ளிக்கு வரும்பொழுது கட்டாயம் முககவசம் அணிந்து வரவேண்டும்.  போதிய சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும்.   மேலும் http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் கூடுதல் விவரங்களை அறியலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.