. -->

Now Online

FLASH NEWS


Thursday 7 January 2021

பள்ளிகளை திறக்க 70% பெற்றோர் கோரிக்கை - வரும் 18 முதல் பள்ளிகள் திறக்க வாய்ப்பு



பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோர்கள் ஆசிரியர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நேற்றும், இன்றும் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பெறப்பட்டட கருத்துக்கள் கல்வி அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பின் முதல்வர் பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிப்பார் என கூறப்படுகிறது. 

இந்நிலையில் இந்த கூட்டத்தில் பள்ளிகளை திறக்க 70% பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி,’ தமிழகத்தில் பள்ளிகளை திறக்க 70% பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர் என்றும், 10, 12-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நெருங்குவதால் நேரில் பயிற்றுவிக்க வேண்டிய அவசியமுள்ளதாக பெற்றோர்கள் கருத்து கூறியுள்ளதாக’ தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் இந்த மாதத்தின் 3வது வாரத்திலேயே பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

-கல்விச்சுடர்